districts

img

ரத்ததானம் செய்து போராட்டத்தை தொடரும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவர்கள்

 புதுச்சேரி, ஆக.19- மருத்துவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி படுகொலை செய்ததை  கண்டித்து புதுச்சேரி ஜிப்மரில் மருத்து வர்கள்  “நீதிக்காக ரத்தம் சிந்துவோம்” என நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொல்கத்தா ஆர்.ஜி.கார் அரசு மருத்துவமனையில்   பெண் மருத்துவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு படு கொலை செய்ததை கண்டித்து புதுச்சேரி யில் இந்திய மருத்தவர்கள் சங்கத்தின் சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது.   மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும், பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலி யுறுத்தி மனித சங்கிலி, அணிவகுப்பு, ஆர்ப்பாட்டம், உண்ணாநிலை என தொடர் போராட்டங்கள் ஜிப்மர் மருத்துவர்கள் சார்பில்  நடைபெற்று வருகிறது.  7வது நாளாக  நூதன முறையில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஜிப்மர் மருத்து வர்கள் ஈடுபட்டனர்.  “நீதிக்காக ரத்தம் சிந்துவோம்” என்ற கோரிக்கையை முன்னிலைப்படுத்தி  ரத்த தானம் செய்து படுகொலை செய்யப்பட்ட மருத்துவருக்கு நியாயம் வழங்க கோரி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நிர்வாகம் எச்சரிக்கை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு எதிரில் நடைபெற்ற போராட்டத்தில் திரளான முதுநிலை மருத்துவர்கள் கோரிக்கை பதாகைகளை ஏந்தியவாறு முழக்கங்களை எழுப்பினர். இந்நிலையில் இந்த போராட்டத்திற்கு ஜிப்மர் நிர்வாகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஜிப்மர் நிர்வாக துணை இயக்குநர் வெளி யிட்டுள்ள செய்தியில் வேலை நிறுத்தமோ, வேலைநிறுத்தத்தை ஊக்குவிக்கும் எந்த நடவடிக்கையையும் விதியை மீறு வதாகும், பணிவிடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபடுவது குற்றமாகும், மீறி போராட்டத்தில் ஈடுபட்டால் கடும் நட வடிக்கை எடுக்கப்படும் என்று நிர்வாகம் தரப்பில் எச்சரிக்கை விடுத்துள்ளது.