புதுச்சேரி அரசு சுற்றுலா வளர்ச்சிக்கு பல்வேறு நட வடிக்கைகளை எடுத்து வருகிறது. புதுச்சேரி கடலில் குளிக்கும் சுற்றுலாவாசிகளை மீட்க நீச்சல் பயிற்சி பெற்ற வீரர்களை அப்பகுதியில் நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை தற்போது எழுந்துள்ளது. இது போன்ற நடைமுறை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது. அதுபோல் சுற்றுலாத்துறை சார்பில் லைப் கார்ட் அமைக்க வேண்டும். நீச்சல் பாதுகாப்பு வீரர்களை மீண்டும் நியமித்து உயிரிழப்புகளை தடுக்க வேண்டும்,என்று புதுச்சேரி உருளையன் பேட்டை சட்ட மன்ற உறுப்பினர் நேரு தலைமையில் ஜனநாயக அமைப்பு கள் சுற்றுலாத்துறையை முற்றுகையிட்டு செவ்வாய் கிழமை போராட்டம் நடத்தியது.