இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும் தலைவர், சுதந்திரப் போராட்ட வீரர், தமிழறிஞர் தோழர் ப.ஜீவானந்தம் 62 வது நினைவு தினத்தையொட்டி, புதுச்சேரி அரசு சார்பில் சாரம் பகுதியில் அமைந்துள்ள அவரது சிலைக்கு அமைச்சர் சாய் ஜே.சரவணன் குமார், சட்டப்பேரவை துணைத் தலைவர் ராஜவேல், சட்டப்பேரவை உறுப்பினர் பாஸ்கர், இடதுசாரி கட்சி தலைவர்கள் சலீம், விஸ்வநாதன், நாரா. கலைநாதன், சேது செல்வம் மற்றும் எழுத்தாளர்கள், கலைஞர்கள் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.