மகாகவி சுப்பிரமணிய பாரதியார் நினைவு நாளையொட்டி புதுச்சேரி பாரதி பூங்காவில் அமைந்துள்ள அவரது சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. துணைநிலை ஆளுநர் கே. கைலாஷ் நாதன், முதல்வர் ரங்கசாமி, சட்டப் பேரவைத் தலைவர் செல்வம். சு, அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், திருமுருகன், சட்டப் பேரவைத் துணைத் தலைவர் ராஜவேலு, அரசு கொறடா ஆறுமுகம் (எ) ஏ கே டி, சட்டமன்ற உறுப்பினர்கள் ரமேஷ், ராமலிங்கம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதேபோல் ஈஸ்வரன் கோயில் வீதியில் அமைந்துள்ள மகாகவி பாரதியார் நினைவு அருங்காட்சியகத்தில் அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.