districts

img

இந்தியா கூட்டணி பிரமாண்ட வெற்றிபெறும்

புதுச்சேரி, மார்ச் 27- இந்திய கூட்டணி சார்பில் புதுச்சேரி  மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் கூட்டணி கட்சி தலைவர்களோடு புதனன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.  பின்னர் செய்தியாளர்களிடம் வைத்திலிங்கம் கூறியதாவது:-  மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். எங்களால் வெற்றி பெறமுடியும் என்ற நம்பிக்கை யுள்ளது.   கடந்த 10ஆண்டுகளாக ரங்கசாமி-பாஜக கூட்டணியில் இருந்தும், பிரதமர் மோடியையும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் ரங்க சாமி சந்திக்கவில்லை. பாஜகவும் எதுவும் செய்யவில்லை. நாங்கள் செய்ய வில்லை என்று கூறி ஆட்சிக்கு வந்து விட்டு எதுவும் செய்யவில்லை. நிதி ஆதாரம் கேட்டோம். ஆட்சி வந்த பிறகும் நிதி ஆதாரம் தரவில்லை- தமிழகத்தைபோல் புதுச்சேரிக்கும் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கைவிரித்து விட்டார். தேர்வு ஆணையம் அமைப்பதாக கூறி விட்டு அடிப்படை எதுவும் செய்ய வில்லை. மக்களுக்கு தெரியும். ரேசன் கடையை திறக்க முடிய வில்லை. அரிசிக்கூட போடவில்லை. சிறுபான்மை மக்களுக்கு யார் நல்லது செய்வார்கள் என்பது தெரியும். மக்களின் முழு ஆதரவு இந்தியா கூட்டணிக்கு உள்ளது. மத்தி யில் பாஜக ஆட்சி அகல வேண்டும். சர்வாதிகார போக்கு மாறவேண்டும். மாநில அரசுக்கு நிதி ஒதுக்கீடு- அதிக அதிகாரம் தேவை ஆகியவை அடிப்படையாக வைத்து பிரச்சாரம் செய்வேன் என்றார் வைத்திலிங்கம். முன்னதாக வேட்பாளர் வைத்தி லிங்கம் சாரம் லெனின் வீதியிலிருந்து அனைத்து கூட்டணி கட்சி தலைவர்கள் நிர்வாகிகள், தொண்டர்களோடு  ஊர்வலமாக சென்று தனது  வேட்பு மனுவை மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கனிடம்   தாக்கல் செய்தார்.