மகாத்மா காந்தியின் பிறந்த நாளையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் அமைந்துள்ள அவரது சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. துணைநிலை ஆளுநர் கைலாஷ் நாதன், முதல்வர் ரங்கசாமி, சட்டப்பேரவை தலைவர் செல்வம், அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், ஜெயக்குமார், சாய் ஜே. சரவணன் குமார் உட்பட பலர் பங்கேற்று மரியாதை செலுத்தினார்.