districts

சென்னை முக்கிய செய்திகள்

புதுச்சேரியில் ஆக. 2-4 சர்வதேச திரைப்பட விழா

புதுச்சேரி,ஜூலை14- சர்வதேச திரைப்பட விழா புதுச்சேரியில்  மூன்று நாட்கள் நடைபெறுகிறது.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் பொன்விழா ஆண்டு தொடக்கத்தையொட்டி, புதுச்சேரி இலாசுப்பேட்டை கிளையின் சார்பில் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கிளைத் தலைவர் பாவலர் சு.சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். 

தமுஎகச‌ மாநில செயற்குழு உறுப்பினர்  சு.ராமச்சந்திரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். செயலர் லெனின் பாரதி, திரை இயக்க பொறுப்பாளர் பாலு, மற்றும்   கொளஞ்சி யப்பன்,சிந்து உட்பட பலர் கூட்டத்தில் பங்கேற்றனர். 

புதுச்சேரி திரை இயக்கம், அலையன்ஸ் பிரான்சிஸ், தமுஎகச சார்பில் ஆகஸ்ட் 2,3,4 தேதிகளில் நடைபெற உள்ள சர்வதேச திரைப்பட விழாவை சிறப்பாக நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் செய்வதென கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.     

மேலும்  பொன்விழா கருத்தரங்கம், தமிழ் ஒளி நூற்றாண்டு கருத்தரங்கம், சிந்து சமவெளி திராவிட நாகரிகம் ஆகிய நிகழ்வுகளை  புதுச்சேரி யில் நடத்துவதென கூட்டத்தில் முடிவு செய்யப் பட்டது.

மதுப்பிரியர் தற்கொலை

விழுப்புரம்,ஜூலை.14- விழுப்புரம் அருகே பெரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் விநாயக மூர்த்தி வயது (30), இவரது மனைவி சுமதி வயது (27), இவர்களுக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது,

விநாயகமூர்த்தி  தினந்தோறும் மது குடித்து விட்டு வீட்டுக்கு சென்றதாக தெரிகிறது, இதனால் கணவன் மனைவிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது, இந்த நிலை யில் சம்பவத்தன்று மது குடித்துவிட்டு விநாயக மூர்த்தி வீட்டுக்கு சென்றுள்ளார், இதை பார்த்து கோபம் அடைந்த மனைவி சுமதி கணவர் விநாயகமூர்த்தியை கண்டித்துள்ளதாக தெரி கிறது, இதில் மனமுடைந்த விநாயகமூர்த்தி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வேலை  வாய்ப்பு முகாம்

ராணிப்பேட்டை, ஜூலை 14-  ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் வெள்ளியன்று (ஜூலை 19) வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் பல முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. முகாமில் 8-ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ மற்றும் பி.இ படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். தனி யார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ச. வளர்மதி கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் இத் தனியார் வேலைவாய்ப்பு முகா மில் பணி நியமனம் பெறுபவர்க ளின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது என தெரிவித்துள்ளார்.