கடலூர்,செப்.14- பொதுத்துறையை பாதுகாக்கக் கோரி காப்பீட்டு கழக ஊழியர் சங்கத்தினர் கடலூரில் பிரச்சாரம் மேற்கொண்டனர். எல்ஐசி உள்ளிட்ட பொதுத்துறை நிறு வனங்களை பாதுகாக்க வேண்டும், எல்ஐசி பாலிசி மீதான வரியை நீக்க வேண்டும், அரசு பொதுத்துறை நிறு வனங்கள் தனியார் மயமாக்கலை கைவிட வேண்டும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் சார்பாக வாகனப் பிரச்சாரம் நடைபெற்றது. சங்கத்தின் வேலூர் கோட்ட 36-வது மாநாடு செப்டம்பர் 23 மற்றும் 24 தேதிகளில் கள்ளக்குறிச்சியில் நடைபெறு கிறது. இந்த மாநாட்டை ஒட்டி பல்வேறு இடங்களில் வாகன பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற பிரச்சாரத்திற்கு சங்கத்தின் தலைவர் பி.ராஜூ தலைமை தாங்கினார். கோட்ட நிர்வாகிகள் எஸ்.பழனி ராஜ், கே. வேலாயுதம், எஸ். ஜெயஸ்ரீ, ஜி.வைத்திலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடலூர் அனைத்து குடியிருப்போர் சங்கங்களின் கூட்டமைப்பின் சிறப்பு தலை வர் எம்.மருதவாணன், தலைவர் பாலு.பச்சையப்பன் ஆகியோர் பிரச்சாரத்தை துவக்கி வைத்து பேசினர். காப்பீட்டு கழக ஊழியர் சங்கத்தின் வேலூர் கோட்ட பொதுச் செயலாளர் எஸ். ராமன் உரை யாற்றினார். எல்ஐசி ஓய்வூதியர் சங்கத்தின் செய லாளர் வி.சுகுமாரன், அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எல். ஹரி கிருஷ்ணன், ஓய்வு பெற்ற ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் என்.காசி நாதன், தமுஎகச மாவட்டச் செயலாளர் பால்கி உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். சங்கத்தின் கிளைச் செயலாளர் எஸ். ஜெ.ராஜீஸ் நன்றி கூறினார்.