districts

img

அவசர சிகிச்சை மையத்தை மீண்டும் திறக்கக்கோரி பொதுமக்கள் போராட்டம்

சென்னை, செப். 4 - ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அவசர சிகிச்சை மையத்தை மீண்டும் திறக்க வலியுறுத்தி புதனன்று (செப்.4) அரசு பொது  மருத்துவமனை பாதுகாப்புக் குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஈஞ்சம்பாக்கம் 100 படுக்கை கொண்ட மருத்துவமனை திறக்கப்பட்டது. தற்போது மாநகராட்சி நகர்ப்புற சமுதாய நல மருத்து வமனையாக செயல்பட்டு வருகிறது. இதனருகே இருந்த புறநகர் மருத்துவமனை யில் இருந்த அவசர சிகிச்சை மையம் சிங்க பெருமாள் கோவில் பகுதிக்கு மாற்றப்பட் டுள்ளது. இதனால் விபத்து உள்ளிட்ட காரணங்க ளால் ஈஞ்சம்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள மக்களால் அவசர சிகிச்சை பெற  முடியவில்லை. செப்.2ந் தேதி மூன்று வயது  குழந்தையும், செப்.3ந் தேதி 45 வயதுள்ள பெண்மணியும் அவசர சிகிச்சை கிடைக் காமல் உயிரிழந்தனர். எனவே, ஈஞ்சம்பாக்கத்தில் அவசர சிகிச்சை மையத்தை மீண்டும் திறக்க வேண்டும், 100 படுக்கை கொண்ட சமுதாய  நல மருத்துவமனைக்கு நிரந்தர மருத்து வர்களை நியமித்து, அனைத்து உபகரணங் களையும் கொண்ட பன்னோக்கு மருத்துவ மனையாக மாற்ற வேண்டும். மருத்துவர் இன்மையால் சிகிச்சை மறுக்கப்பட்டு உயிரிழந்த இருவரது குடும்பத்திற்கும் தலா ரூ.10 லட்சம் நிவார ணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஈஞ்சம்பாக்கம் மருத்துவமனை அருகே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாதுகாப்புக் குழு உறுப்பினர் ப.நாராயணன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் சிபிஎம்  தென்சென்னை  மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், செயற்குழு உறுப்பினர் கே.வனஜகுமாரி, சோழிங்கநல்லூர் பகுதிச் செயலாளர் ப.ஜெயவேல், பாதுகாப்புக் குழு உறுப்பினர் கள் சாந்தகுமாரி, அ.வெண்மதி, ஜீவானந் தம், தவமணி, ராஜேந்திரன் உள்ளிட்டோர் பேசினர்.