மாவீரர்கள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் 91ஆவது நினைவு தினத்தையொட்டி புதனன்று (மார்ச்) ஆலந்தூர் பகுதி, நங்கநல்லூரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. தென்சென்னை மாவட்டத் தலைவர் எம்.ஆர்.சுரேஷ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினர் எல்.பி.சரவணத்தமிழன், மாவட்டச் செயலாளர் தீ.சந்துரு, நிர்வாகிகள் திவாகர், ராஜாமணி, நிவேதா, இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ரா.பாரதி உள்ளிட்டோர் பேசினர்.