districts

img

சுடுகாட்டு பாதை ஆக்கிரமிப்பை அகற்ற பொதுமக்கள் வலியுறுத்தல்

கடலூர், பிப்.19- கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில்  பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆட்சி யர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கி பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார். அப்போது புவனகிரி அருகே வில்லிய நல்லூர் கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில், எங்கள் பகுதியில் 25 ஆண்டுகளுக்கு முன்பு சுடுகாடு கட்டப்பட்டது. இந்த சுடுகாட்டுக்கு செல்ல  நாங்கள் மண் பாதையை பயன்படுத்தி வந்தோம். இந்த நிலையில் அந்த பாதையை தனி நபர்கள் சிலர் ஆக்கிரமித்து முந்திரி சாகுபடி செய்துள்ளனர். இது தொடர்பாக மனு அளித்ததன் அடிப்படை யில் புவனகிரி தாசில்தார் தலைமையில் சமா தான பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தப் பட்டது. அதில் பாதையை அளவீடு செய்து சுடுகாட்டிற்கு செல்ல பாதை வசதி ஏற்படுத்தி தருவதாக உறுதி அளிக்கப்பட்டது. அதன் பேரில் பாதை அளவீடு செய்யும் பணியும் நடைபெற்றது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  எனவே சுடுகாட்டிற்கு செல்ல பாதை வசதி ஏற்படுத்திக் கொடுக்க ஆவண செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப் பட்டுள்ளது.