districts

img

உதவி வழங்கல்

சென்னை ஆலந்தூர் தண்டுமா நகரில் வசிக்கும் இரண்டு கால்களும் பாதிக்கப்பட்ட லட்சுமி என்ற மாற்றுத்திறனாளி கயவன் ஒருவனால் கர்ப்பிணியாக்கப்பட்டு ஏமாற்றப்பட்டார். இந்நிலையில் லட்சுமிக்கு குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தையின் பராமரிப்பு செலவுக்காக தென்சென்னை மாவட்டக் குழு சார்பில் ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டது. மேலும் மாதமாதம் 1000 ரூபாய் அவரது வங்கி கணக்கிற்கு அனுப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் மாநிலத் தலைவர் தோ.வில்சன், மாநிலச் செயலாளர் பா.ஜான்சிராணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.