districts

img

உலக மாற்றுத்திறனாளர்கள் தினவிழா: 400 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

திருவள்ளூர், ஜன 7- திருவள்ளூர் மாவட்டம்,வஞ்சிவாக்கம் பேரிடர் பல்நோக்கு மையத்தில்  மாற்று திறனாளிகள் ஒன்றிய கூட்டமைப்பு, சென்னை சமூக சேவை சங்கம்,வசந்தம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு நடத்திய உலக மாற்றுத்திறனாளர்கள் தின விழா ஞாயிறன்று (ஜன.7)  நடைபெற்றது. தடையின்றி தலை நிமிர்வோம் எனும் தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு சென்னை சமூக சேவை சங்கத்தின் இயக்கு நர் எம்.வி.ஜேக்கப் தலைமை தாங்கி னார். அருட்செல்வி முன்னிலை வகிக்க மலரும் மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு ஒன்றிய தலைவர் வேலாயுதம் வர வேற்றார்.சென்னை சமூக சேவை ஒருங்கி ணைப்பாளர் ஹாஜா மொய்தீன் நிகழ்ச்சி தொகுத்து வழங்கினார். திருவெள்ளைவாயல் கூட்டுறவு வங்கி மூலம் ஐந்து மாற்றுதிறனாளர்களுக்கு தலா ரூ10ஆயிரம், ,மனநலம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித் தொகை கள்,சக்கர நாற்காலி, மூன்று சக்கர சைக்கிள்,வாக்கர்,நடைக்குச்சிகள் உள்ளிட்ட ரூ2 லட்சத்துக்கும் மேற்பட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மீஞ்சூர் சுற்றுவட்டார பகுதியிலிருந்து சுமார் 400க்கும் மேற்பட்ட மாற்றத்திற னாளிகள் இதில் கலந்து கொண்டனர். மாற்றுத்திறனாளிகளுக்கான இருக்கை வாகனத்தை மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் கிரியா சக்தி வழங்கினார்.