வேலூர், ஆக.7- அகில இந்திய பிஎஸ்என்எல் (டாட்) ஓய்வூதியர் சங்கத்தின் வேலூர் மாவட்ட 5வது மாநாடு புதன்கிழமை நடைபெற்றது. மாநாட்டிற்கு தலைவர் சி.ஞானசேகரன் தலைமை தாங்கினார். மாவட்டச் செய லாளர் வி.ஏழுமலை வரவேற்றார். பொது மாநாட்டை மாநிலத் தலைவர் சி.கே.நரசிம்மன் துவக்கி வைத்தார். மண்டல பொது மேலாளர் ஏ.வி.ஸ்ரீகுமார், பொது மேலாளர் (நிர்வாகம்) எஸ்.கே.பசக், பிஎஸ்என்எல் எம்ப்ளாயீஸ் யூனியன் மாவட்டச் செயலாளர் மாரிமுத்து, தொலைத்தொடர்பு ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் பிரகாஷ் மற்றும் சகோதர சங்க தலைவர்கள் வாழ்த்திப் பேசினார். பிரதிநிதிகள் மாநாட்டை மாநிலச் செயலாளர் ஆர்.ராஜசேகர் துவக்கி வைத்து பேசினார். மாவட்டச் செயலாளர் வி.ஏழுமலை, பொருளாளர் பி.ஸ்ரீதரன் அறிக்கையை சமர்ப்பித்தனர்.மாவட்ட இணை செயலாளர் பி.சரவணன் நன்றி கூறினார். தீர்மானம் அனைத்து பகுதிகளுக்கும் தரமான சேவை வழங்கும் வகையில் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4 ஜி மற்றும் 5 ஜி சேவையை உடனடியாக வழங்க வேண்டும். போர்க்கால அடிப்படையில் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும். நிதி நிலையை காரணம் காட்டி 01.01.2017 முதல் ஏழு ஆண்டுகளாக வழங்கப்பட வேண்டிய பிஎஸ்என்எல் ஊழி யர்கள் ஊதிய மாற்றம், ஓய்வூதியர்கள் ஓய்வூதிய மாற்றத்தை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நிர்வாகிகள் மாவட்ட தலைவராக சி.ஞானசேகரன், செயலாளராக பி.முருகன், பொருளாளராக பி.லொகநாதன் தேர்வு செய்யப்பட்டனர்.