சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் சார்பில் செவ்வாயன்று (ஜன.3) ஆரப்பாட்டம் நடைபெற்றது.
பொங்கல் தொகுப்புடன் ஊக்கத் தொகையாக ரூ 5000 வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி திருவண்ணாமலை காந்தி நகரில் உள்ள நல வாரிய அலுவலகம் முன்பு கட்டுமான தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் ஆர்.கமலக்கண்ணன் தலைமை தாங்கினார், சிஐடியு நிர்வாகிகள் இரா.பாரி, எ. சேகர், மு. பாலாஜி, வெ.சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.