புதுச்சேரி செப். 7- ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கை களை கண்டித்தும் புதுச்சேரி மக்களை பாதுகாக்க ரேசன் கடை களை திறந்து குறைந்த விலைக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்காத மாநில கூட்டணி அரசை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மூன்று மையங்களில் மறியல் போராட்டம் நடை பெற்றது. புதுச்சேரி ரயில் நிலை யம் முன்பு நடந்த மறியல் போராட்டத்திற்கு நகரச் செயலாளர் மதிவாணன், உழவர்கரை நகர செயலா ளர் ராம்ஜி ஆகியோர் தலைமை தாங்கினர். மாநிலச் செயலாளர் ஆர். ராஜாங்கம், மூத்த தலைவர்கள் தா. முருகன், சுதா சுந்தரராமன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் ராமச்சந்திரன், கொளஞ் சியப்பன், சத்யா உட்பட பலர் போராட்டத்தில் பங்கேற்ற னர். முன்னதாக அண்ணா சிலையில் இருந்து ஊர்வல மாக வந்தவர்களை வானர பேட்டை அருகில் தடுத்து நிறுத்தி காவல்துறையினர் கைது செய்தனர். வில்லியனூர் புதுச்சேரி வில்லியனூர் துணை ஆட்சியர் அலுவல கம் அருகில் உள்ள மத்திய கருவூலம் எதிரில் நடை பெற்ற மறியலில் மன்னா டிபட்டு, பாகூர், வில்லி யனூர் ஆகிய இடைக்குழு செயலாளர்கள் அன்புமணி, ராமமூர்த்தி, சரவணன் ஆகியோர் தலைமை தாங்கினர். மாநில செயற்குழு உறுப்பினர் பெருமாள் மறியல் போராட் டத்தை விளக்கி பேசினார். செயற்குழு உறுப்பினர் கள் சீனுவாசன், பிரபுராஜ் மாநிலக் குழு உறுப்பினர் கள் ராமசாமி, சங்கர், மாரிமுத்து, பிரேமதாசன், இளவரசி உட்பட திரளா னோர் மறியல் போராட்டத் தில் பங்கேற்றனர். முன்னதாக கோட்டை மேட்டில் இருந்து ஊர்வல மாக வந்தவர்களை காவல் துறையினர் துணை ஆட்சி யர் அலுவலகம் எதிரில் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். காரைக்கால் காரைக்கால் ரயில் நிலை யத்தில் நடைபெற்ற போராட்டத்திற்கு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பி னர் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் கலியமூர்த்தி கோரிக்கைகளை வலி யுறுத்தி பேசினார். மாவட்டச் செயலாளர் தமீம் உட்பட பலர் கைது செய்யப்பட்ட னர்.