திருத்தணி,ஜூன் 9-
திருத்தணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தாரை தப்பட்டையுடன் தாம்பூல தட்டில் மனு கொடுத்து காத்திருப்பு போராட்டம் நடத்த இருந்த நிலையில் திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் தீபா பேச்சுவார்த்தைக்கு அழைத்தார்.
கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் வட்டாட்சியர் நேர்முக உதவியாளர் ராமன் மற்றும் வட்ட வழங்கல் அலுவ லர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பங்கேற்றனர். கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பெருமாள், வட்ட செயலாளர் அந்தோணி, மாவட்டக் குழு உறுப்பினர் அப்சல் அகமத் மற்றும் வட்டக் குழு உறுப் பினர்கள் சின்னதுரை , ரீசர், பிருந்தா வனம் ஜெய்சங்கர் ஆகியோர் முன்னிலை இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
ஒவ்வொரு கிராமத்தில் இருந்தும் பிரதிநிதிகள் கலந்து கொண்டு கோரிக் கைகளை முன்வைத்தனர். பேச்சு வார்த்தையின் போது புதியதாக பொறுப்பேற்ற வருவாய் கோட்டாட்சி யர் தீபா பிரச்சனைகளுக்கு தீர்வு காண, ஒரு மாத காலம்அவகாசம் கோரினார். அதற்குள் இந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளித்தார்.
பீரகுப்பம் இருளர் காலனி மக்களுக்கு மாற்று இடம் வழங்க 15 நாட்களில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். தாடூர் ஊராட்சி இ என் கண்டிகை ஆதிதிராவிட 11 குடும்பங்களுக்கு 7 நபர்களுக்கு பட்டா தயாராகி உள்ளது. செருக்கனூர் காலனி மக்களுக்கு பகுதி நேர ரேஷன் கடை அமைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. சுடுகாடு பாதை அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும், பங்களா மேடு பகத்சிங் நகர், வி.கே.என். கண்டிகை அருந்ததியினர், கோரமங் கலம் இருளர் காலனி, ஆட்டோ, சாலை போக்குவரத்து தொழிலா ளர்கள் சிறுபான்மையினர், நல்லாட்டூர் ஆதிதிராவிட மக்கள் ஆகியோருக்கு மாற்று இடமும் பட்டாவும் வழங்க ஒரு மாத காலம் அவகாசம் கோரினார்.
இதனைத்தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் பகத் சிங் நகர் இருளர் காலனிக்கு 200 மீட்டர் சிமெண்ட் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அங்கன்வாடி மையம் அமைக்க தொகுப்பு வீடுகள் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். டி என் ஆர் கண்டிகை கிராமத்திற்கு பாலம் கட்ட நபார்டு திட்டத்தில் கட்ட பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்றும் பகத் சிங் நகர், ஆர் டி ஓ சத்யா நகர், இருளர் குடியிருப்புகளுக்கு தெரு மின் விளக்குகளுக்கு இணைப்பு வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இந்த உறுதிமொழியை டுத்து தற்காலிகமாக போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.