districts

கடலூரில் பட்ஜெட் நகலை எரித்து போராட்டம்

கடலூர், பிப்.5- கடலூரில் விவசாயிகள் ஐக்கிய முன்னணி சார்பில் பட்ஜெட் நகல் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய பட்ஜெட்டில் உரங்களுக்கு மானியத்தில் நிதி குறைப்பு, 100 நாள் வேலை திட்டத்திற்கு போதிய நிதி ஒதுக்கப்படவில்லை, விவசாய கடன் தள்ளுபடி இல்லை, விவசாயிகள் மற்றும் உழைக்கும் மக்கள் மீதான ஒட்டுமொத்த தாக்குதலை கொடுத்த ஒன்றிய ஒன்றிய பாஜக அரசின் பட்ஜெட்டை கண்டித்து கடலூரில்  ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் நகல் எரித்து போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.கே.சரவணன் தலைமை தாங்கினார். சிபிஎம் மாவட்ட செயலாளர் கோ.மாதவன்,  விவசாயிகள் சங்கம் மாவட்ட பொருளாளர் ஆர்.ராமச்சந்திரன்,  மாவட்ட தலைவர் சிவகுமார், துணைத் தலைவர் எஸ்.தட்சணாமூர்த்தி,  மக்கள் அதிகாரம் பாலு, மாவட்ட செயலாளர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டு ஒன்றிய பட்ஜெட்டின் நகலை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.