மக்களை பிளவுபடுத்தும் வகையில் ஒன்றிய பாஜக அரசு அமல்படுத்தி உள்ள குடியுரிமை சட்டத்தை கண்டித்து புதுச்சேரி சுதேசி பஞ்சாலை எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் பிரதேச தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., சிபிஎம் மாநிலச் செயலாளர் ஆர். ராஜாங்கம், சிபிஐ மாநிலச் செயலாளர் சலீம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநிலச் செயலாளர் தேவ. பொழிலன், சிபிஐ, எம்.எல். கட்சியின் மாநிலச் செயலாளர் சோ. பாலசுப்ரமணியன், விடுதலைக் கழக தலைவர் சிவ.வீரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்தும், ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும் கடலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் கூட்டணி கட்சியை சேர்ந்த மாநில, மாவட்ட நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.