‘அம்பேத்கரை இழிவுபடுத்திய அமித்ஷா மன்னிப்பு கேள்! பதவி விலகு!’ என வலியுறுத்தி வியாழனன்று (டிச.26) சைதாப்பேட்டையில் கண்டனக் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் தமுஎகச இணைந்து இந்நிகழ்வை நடத்தின. கி.கமலகண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் முன்னணியின் மதிப்புறு தலைவர் எஸ்.கே. மகேந்திரன் பேசினார். தமுஎகச மாநில பொருளாளர் சைதை ஜெ., மாவட்டத் தலைவர் சி.எம்.குமார், பொருளாளர் ஐ.சரத்குமார், முன்னணியின் தென்சென்னை மாவட்டத் தலைவர் ச.லெனின், செயலாளர் கே.மணிகண்டன், தமுஎகச சைதை தலைவர்கள் மு.சா., கவிஞர் ப.குமார் உள்ளிட்டோர் பேசினர்.