districts

சென்னையில் 388 அம்மா உணவகங்களை புதுப்பிக்க திட்டம்

சென்னை,செப்.13- சென்னை மாநகராட்சி  மூலம் 388 அம்மா உணவ கங்கள் செயல்படுகின்றன. மறைந்த முன்னாள் முதல மைச்சர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட இந்த உணவகங்கள் செயல்படும் கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளன. இந்த நிலையில் அம்மா உணவகங்களை சீரமைக்க வும், உடைந்து போன பாத் திரங்களை மாற்றவும் மாநக ராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 388 அம்மா உணவகங் களுக்கும் பாத்திரங்கள் மற்றும் சமையல் அறை உள்ளிட்டவற்றை சரி செய்ய ரூ.7 கோடியே 6 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அம்மா உணவகத்திற்கும் தலா ரூ.2 லட்சம் வீதம் செல விடப்பட உள்ளது. என்னென்ன பாத்திரங் கள் புதிதாக வாங்க வேண்டும் என்பது குறித்து கணக்கெடுக்கப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல கட்டிடங்களை யும் பழுது பார்க்க ஆய்வு செய்யும் பணி நடந்தது. அம்மா உணவகங்கள் செயல்படும் கட்டிடங்களை சீரமைக்கும் வகையில் கணக்கெடுக்கப்பட்டது. அதில் இதுவரையில் 300 அம்மா உணவக கட்டிடங் களை சீரமைக்க கடிதம் பெறப்பட்டுள்ளதாக கூறப் படுகிறது.