districts

img

மாணவர்களுக்கு  கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி

தமிழ்நாடு பாலர் சங்கம் காஞ்சிபுரம் மாவட்டம் சார்பில் நூறு மாணவர்க ளுக்கு  நோட்டு, புத்தகம் மற்றும் எழுதுப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி  சனிக்கிழமையன்று  கே.எஸ்.பி நினைவு இல்லத்தில் நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வி.சிவப்பிரகாசம் தலைமையில் ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் கி.ஜெயராமன் மாணவ,மாணவிகளுக்கு பொருட்களை வழங்கினார். காஞ்சி மாநகர் ஒருங்கிணைப்பாளர் கே.சங்கர், தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்கம் மாவட்டத் தலைவர் பி.கே.வேணுகோபால், வாலிபர்  சங்கம் மாவட்டக்குழு உறுப்பினர் எம்.சூரிய பாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.