districts

img

தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி

தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வடசென்னை மாவட்ட தலைவர் ஆர்.ஜெயச்சந்திரன் தலைமையில் ஞாயிறன்று (டிச. 10) ஆர்.கே. நகரில் நடைபெற்றது. இதில் மாநில பொதுச் செயலாளர் பா.ஜான்சிராணி, 39 வட்ட மாமன்ற உறுப்பினர் தேவி கதிரேசன். ரோட்டரி கிளப் நிர்வாகி ராமசுப்பிரமணியன், மாவட்ட நிர்வாகிகள் நடராஜன், ராஜ், ஜெயந்தி, செல்வகுமாரி, ராஜேந்திரன், மகேந்திரன், பிரேமா, கீதா, குருமூர்த்தி, தில்சாத் பேகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.