சென்னை, அக். 11- ஸ்ரீராம் இலக்கியக் கழகம், தமிழகம் முழுவதும் திருக்குறள் போட்டிகளை மாணவர்களுக்காக நடத்தி வருகிறது. இதில் ஒரு பகுதியாக சென்னையில், அண்ணா நகரில் உள்ள ஜெஸ்ஸி மோசஸ் பள்ளியில் இந்தப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இதில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள பள்ளி - கல்லூரிகளைச் சேர்ந்த 906 மாணவர்கள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ந. அருள் பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீராம் சிட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் ஜார்ஜ் ஸ்டீபன், புகழேந்தி ஆகியோர் கலந்து கொண்டனர். காபி நிலையம்