திருவள்ளூர், ஆக 22- சென்னை கோடம்பாக் கத்தில் ஆக 18 அன்று தேசிய அளவில் கராத்தே போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் கோஜூ ரியோ ஸ்போட்ஸ் டு அகாடமி சார்பில் தலைமை பயிற்சி ஆசிரியர் சுப்பிரமணி, கராத்தே பயிற்சி ஆசிரி யர் தினேஷ் ஆகியோர் தலையில் திருவள்ளூர் மாவட்டம், தண்டலம் மற்றும் லட்சிவாக்கம் கராத்தே பள்ளி மாணவர்கள் 6 பேர் வெற்றி பெற்றனர். இதில் 14 வயதிற்கு உட்பட்ட சண்டை போட்டி யில் அஹிஷ் முதல் பரிசை தட்டிச் சென்றார். 12 வய திற்கு உட்பட்ட பிரிவில் பத்மேஷ் முதல் இடம் பெற்று பரிசு மற்றும் சான்றி தழ் பெற்றனர். 14 வயதிற்கு உட்பட்ட பிரிவு சண்டை போட்டியில் தனுஷ்ஸ்ரீ இரண்டாம் இடம் பிடித்தார். 11 வயதிற்கு உட்பட்ட பிரிவு சண்டை போட்டியில் அத்வித்கார்த்தி கேயன் இரண்டாம் இடமும் 12 வயதிற்கு உட்பட்ட தனித்திறமை போட்டியில் சபரிஷ் இரண்டாம் இடமும் 10 வயதிற்கு உட்பட்ட பிரிவில் ஸ்ரீவைபோ 2ஆம் இடமும் பிடித்தனர்.போட்டி யில் வெற்றி பெற்ற மாண வர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கப் பட்டது.