புதுச்சேரி, நவ.14- புதுச்சேரி அரசு, பள்ளிக் கல்வி இயக்ககம் சார்பில் ‘குழந்தைகள் நாள் விழா 2024’ வியாழனன்று கருவடிக்குப்பம் கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள, காமராஜர் மணிமண்டபத்தில் நடை பெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி முதன்மை விருந்தினராக பங்கேற்று சிறந்த படைப்பாளி குழந்தை களுக்கான விருதுகளை வழங்கி பேசினார். விழாவில் கல்வி அமைச்சர் நமச்சிவாயம் முன்னதாக விழாவிற்குத் தலைமை ஏற்று குழந்தைகள் நாள் விழா போட்டிகளில் மண்டல அளவில் வென்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி னார். நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை மூலம் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கு தல், புதுப்பித்தல் மற்றும் பள்ளிகள் தொடங்கவும் சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ அங்கீகாரம் பெறவும் தேசிய தகவலியல் மையம் மூலம் தொடங்கப் பட்ட இணையதளத்தை முதல்வர் துவக்கி வைத்தார். பள்ளிக்கல்வித்துறை மூலம் இந்த ஆண்டு பள்ளி முன்பருவ குழந்தைகளுக்கான கதைகள், பாடல்கள் மற்றும் 6-ஆம் வகுப்புக்கான புதுச்சேரி யின் வரலாறு புத்தகம் விழாவில் வெளி யிடப்பட்டது.பள்ளிக் கல்வி இயக்குநர் பிரியதர்ஷினி, துறை அதிகாரிகள், ஆசிரியர்கள் மற்றும் திரளான மாணவர்கள் கலந்து கொண்டனர்.