பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மண்டலம் சார்பில் எம்.தனலட்சுமி தலைமையில் திருச்சி நோக்கி பயணிக்கும் நடை பயன பிரச்சார குழுவிற்கு ஐ.சி.எப். யுனைடெட் ஒர்க்கர்ஸ் யூனியன் சிஐடியு தலைவர் எஸ்.ராமலிங்கம் தலைமையில் பெரம்பூர் ஷெல் கேட் அருகே சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது. இதில் என்.எப்.ஐ.ஆர். தலைவர் டி.எம்.செந்தில்குமார், செயலாளர் ஆர்.குருநாதன், சங்க நிர்வாகிகள் வி.எம்.கிருஷ்ணகுமார், எம்.வி.கிருஷ்ணராவ், வி.மோகன், ஜோஷி, வேலாயுதம், நடராஜன், சிவராஜ், ரமேஷ் பாபு, பாஸ்கரன், செல்வராசன், தமுஎகச தலைவர் எஸ்.ஆர்.தமிழ்செல்வன், செயலாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.