பூவிருந்தவல்லி நகராட்சி, குமணன்சாவடியில் உள்ள தனியார் திருமண மண்டபம் மற்றும் பாரிவாக்கம் சமுதாயகூடம் ஆகிய பகுதிகளில் மின்சாரத்துறை, நகராட்சி நிர்வாகம், வருவாய்த்துறை உள்ளிட்ட 10 துறைகளின் சார்பாக பொதுமக்களுக்கு 32 வகையான சேவைகள் வழங்கும் பொருட்டு புதனன்று (நவ 22) நடைபெறும் “மக்களுடன் முதல்வர்” சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகள் வழங்கினார். உடன் பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி, பூந்தமல்லி நகராட்சி தலைவர் காஞ்சனா சுதாகர், பூந்தமல்லி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.