districts

தனியார் கல்வி நிறுவனங்கள் ரூ.249 கோடி குத்தகை பாக்கி சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தகவல்

 சென்னை, நவ. 29 - மாநகராட்சிக்கு சொந்தமான 446 நிலங்கள் கணினியில் பதி வேற்றம் செய்யப்பட்டு பல்வேறு பயன்பாட்டிற்காக குத்தகை விடப்பட்டுள்ளது. 31-3-2021 ஆண்டு வரை வரவேண்டிய 419.52 கோடி ரூபாய் குத்தகையில் 416.83 ரூபாய் வசூலாகவில்லை என்று சென்னை மாநகராட்சி  கணக்குக்குழுத் தலைவர் க.தனசேகரன் கூறினார். மாமன்ற கூட்டத்தில் பேசிய அவர் 2020-2021 நிதியாண்டில் தனி யார் பள்ளி கல்வி நிறுவனங்கள்  248.95 கோடி ரூபாய் குத்தகையை செலுத்தாமல் உள்ளன. வால்டாக்ஸ் ரோட்டில் வணிக பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட 201 நிலங்களில் இருந்து 92.91 கோடி ரூபாயும், பிற 75 நிலங்களில் இருந்து 45.7 கோடி ரூபாயும், 136 குடியிருப்பு நிலங்களில் இருந்து 8 கோடி ரூபாயும் வசூலாக வேண்டும். இது தொடர்பான வழக்கு களை விரைந்து முடிக்க வேண்டும். குத்தகை செலுத்தாமல் உள்ள வர்களுக்கு நினைகூட்டல் கடிதம் மட்டும் அனுப்பாமல் சட்டபூர்வ நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்த 446 நிலங்களை தவிர்த்து மாநகராட்சிக்கு சொந்த மான பல நிலங்களின் விவரங்கள் பரா மரிக்கப்படாமல், குத்தை கேட்காமல், கணினியில் பதிவேற்றா மல் உள்ளது. இதனால் அந்த நிலங்களை பலர் ஆக்கிர மித்துள்ளதை அகற்றாவிடில், நிலத்தை இழக்க வேண்டி வரும். வருவாய் துறை 2020 -2021 ஆண்டு 1012.35 கோடி ரூபாய் சொத்து வரி வசூ லாகி இருக்க வேண்டும். இதில் 602.57 கோடி ரூபாய் நிலுவை உள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் சொத்து வரியில் 56 விழுக்காடு மட்டுமே வசூலாகி உள்ளது. தொழில் வரியாக 852 கோடி ரூபாய் வசூலாகி இருக்க வேண்டும்.

மாறாக, 76.53 கோடி ரூபாய் மட்டுமே வசூலாகி உள்ளது. இதில் 775.54 கோடி நிலுவை உள்ளது. எனவே, சொத்து மதிப்பினை மறு சீராய்வுக்கு உட்படுத்தி சீர்திருத்தப் பட்ட வரியை விதிக்க வேண்டும். குறிப்பாக, 100வது வார்டில் செயல்படும் நகைக்கடை, தனது வாகன நிறுத்தும் இடத்திற்கு குடியிருப்பு கட்டண அடிப்படையில் வரி செலுத்தி வருகிறது. இத்தகையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 1129 கட்டிடங்களில் செயல் படும் தனியார் பள்ளிகள், சுயநிதி கல்லூரிகள் மற்றும் இதர கல்வி நிறுவனங்கள் மார்ச் 2021 வரை 9 கோடி ரூபாய் நிலுவை வைத்துள்ளதை வசூலிக்க வேண்டும். வரிகளை காசோலையாக கொடுத்து, அவை பணம் இல்லா மல் திரும்பி வருகின்றன. கடந்த கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் இது போன்று 11.78 கோடி ரூபாய் திரும்பி வந்துள்ளது. இத்தகைய காசோலை தருவோர் மீதுகடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கார்டு, யுபிஐ முறை களை கையாண்டு நிதிகளை வசூ லிக்க வேண்டும். நீண்ட காலம் வரி செலுத்தாதவர்களின் குடிநீர், கழிவுநீர் இணைப்பு களை துண்டிக்க வேண்டும். மாநகராட்சி வருவாயை உயர்த்த 29 ஆண்டுகளாக உயர்த்த படாமல் உள்ள நிறுவன வரி, 8 ஆண்டு களாக உயர்த்தப்படாமல் உள்ள கேபிள் டிவி தரை வாடகைகளை உயர்த்த வேண்டும். அம்மா உணவகம் வாயிலாக கடந்த 9 ஆண்டுகளில் 787 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்ய வேண்டும். 500 ரூபாய்க்கு குறைவாக விற்பனையாகும் மையங்களை மூட வேண்டும் இவ்வாறு அவர் கூறினார். இதற்கு பதிலளித்த மேயர் ஆர்.பிரியா, அம்மா உணவகங்கள் தொடங்கியதில் இருந்து எப்படி செயல்படுகிறதோ அப்படியே செயல்படும். பயன்பாட்டில் இல்லாத அம்மா உணவக ங்கள் ஆய்வு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.