districts

சென்னை முக்கிய செய்திகள்

பண பரிவர்த்தனை மோசடி:  தனியார் வங்கி ஊழியர் கைது

காஞ்சிபுரம், மார்ச்13 - காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் பகுதி யில் தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் துணை மேலாளராக விஜய் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். ஒரகடம் பகுதியில் அமைந்துள்ள ராகா பிளாட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் விஜயகுமார் என்பவர் விஜயிடம் ரூ.30 லட்சம் கொடுத்து நிரந்தர வைப்பு நிதியில் செலுத்தி விடுமாறு அளித்துள்ளார். ஆனால் துணை மேலாளராக பணி புரிந்த விஜய் அந்த பணத்தை தனது நண்பர்  ஆனந்த் செல்வராஜ் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்துள்ளார். இது தொடர்பாக ஐசிஐசிஐ வங்கியின் மண்டல மேலாளர் மாரியப்பன் அளித்த புகாரின் பேரில் விஜய்  மற்றும் ஆனந்த் செல்வராஜ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதேபோல் மேல்மருவத்தூர் பகுதியை  சேர்ந்த ஜானகி ராமன் என்பவர் திருப் பெரும்புதூர் பகுதியில் தொழிற்சாலை நடத்தி வரும் நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவில் அளித்த புகாரில், ஒரகடம் ஐசிஐசி ஐ வங்கியில், தான் கணக்கு  வைத்திருந்ததாகவும் அப்போது பணிபுரிந்த  துணை மேலாளர் விஜய் நன்கு பழக்கம் ஏற்பட்டு வங்கி பரிவர்த்தனைக்கு உதவி வந்துள்ளார். இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட விஜய், கணக்கு வங்கியில் தவறான  பரிவர்த்தனையில் நெருக்கடி ஏற்பட்டுள்ள தாகவும் அதனை சரி செய்ய ரூ.15 லட்சம்  தேவைப்படுவதாக கூறி தொகையை காசோலையாக பெற்று ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இரு வழக்குகளிலும் ஒரே குற்றவாளி என்பதால் தனியார் வங்கி துணை மேலாளர் விஜய், காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையால் கைது  செய்யப்பட்டு காஞ்சிபுரம் குற்றவியல் நடுவர்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் பரிவர்த்தனைக்கு உதவிய அவரது நண்பர்கள் தினேஷ் மற்றும் ஆனந்த்  செல்வராஜ் இருவரையும் காவல்துறை யினர் தேடி வருகின்றனர்..

சாலையில் திரியும் மாடுகள்  சிறைபிடிப்பு

காஞ்சிபுரம், மார்ச் 13 - காஞ்சிபுரத்தில் விபத்து ஏற்படும் வழியில் சாலையில் சுற்றித்திரிந்த கால்நடை களை காஞ்சிபுரம் மாநகராட்சி மாநகர் நல அலுவலர் தலைமையிலான குழுவினர் பறி முதல் செய்யும் பணியை தொடங்கி உள்ள னர். சாலைகளில் கால்நடைகள் சுற்றித் திரிவதாக பொதுமக்கள் தொடர் புகார் தெரிவித்ததால் புதனன்று காஞ்சிபுரம் மாநகராட்சி மாநகர் நல அலுவலர் டாக்டர் அருள்நம்பி தலைமையிலான குழுவினர் ராஜாஜி மார்க்கெட், காந்தி சாலை , விளக்கடி கோயில் தெரு, செவிலிமேடு காவ லன்கேட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளை பிடித்து  வண்டியில் ஏற்றினர். இதில்  ஆறு மாடுகள் சினை பிடித்திருந்த  நிலையில் கால்நடை மருத்துவரின், மருத்துவ பரிசோதனைக்கு பின்பு அதன் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் மீதமுள்ள மாடுகள் கோசாலைக்கு அனுப்பும் பணி மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது.

விவோவின் புதிய வரவு

சென்னை, மார்ச் 11-  புதுமையான உலகளாவிய ஸ்மார்ட்போன் பிராண்டாக திகழும் விவோ, தனது பிரபலமான வி மாடல் வரிசையில் தற்போது புதிதாக வி 30 மற்றும் வி30 புரோ ஆகிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது.  மிக மெல்லிய தோற்றத்தில் ஜெய்ஸ் நிறுவன கூட்டுடன் பயனர்களுக்கு ஸ்டூடியோ தரத்தில் புகைப்பட அனுபவத்தை வழங்கும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன்கள் 5000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது.   8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மெமரி கார்டுடன் 41999 ரூபாய்க்கும் 12ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி மெமரி கார்டுடன் 46999 ரூபாய்கும் கிடைக்கிறது.

சென்னையில் குத்தகைக்கு இடங்களை எடுப்பது அதிகரிப்பு 

சென்னை, மார்ச் 13- சென்னையில் தொடர்ந்து 6வது ஆண்டாக  சர்வதேச நிறுவனங்கள் அலுவலக இடங்களை குத்தகைக்கு எடுப்பது அதிகரித்துள்ளது.    சென்னை மாநகரம் சர்வதேச அளவில் வேகமாக  வளர்ந்துவரும் நகரமாக உள்ளது. எனவே பொறியியல் மற்றும் உற்பத்தி, வங்கி, நிதிச் சேவைகள் காப்பீட்டுத் துறையில் உலகளாவிய திறன் மையங்கள் 2023 ஆண்டு குத்தகை அடிப்படையில் அலுவலக இடங்களை அதிகமாக  தேர்வுசெய்தன என்று நாட்டின் முன்னணி ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான கேபிஆர்இ சவுத் ஏசியா நிறுவனம் தெரிவித்துள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளில், சென்னையில் 25 முதல் 27 மில்லியன் சதுர அடி இடங்கள் குத்தகைக்கு விடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அந்நிறுவனம் மேலும்  கூறியுள்ளது. சேமிகண்டக்டர் உற்பத்தி, எண்ணை மற்றும் எரிவாயு பணியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் தங்களது சேவைகளை டிஜிட்டல் மயமாக்க அலுவலங்களை குத்தகைக்கு எடுத்து வருகின்றன.

வலி நிவாரணி மாத்திரைகளை போதைப் பொருளாக  விற்பனை

கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் 4 பேர் கைது

கடலூர் ,மார்ச் 13- கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் போதைப் பெருட்களுக்கு மாணவர்கள் அடி மையாகி வருவதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்க ளுக்கு தகவல் கிடைத்தது. அதனை அடுத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரின் சிறப்பு புலனாய்வு பிரிவினர் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது கடலூர் திருப்பாதிரிப் புலியூர் பகுதியில் வலி நிவாரணி மாத்திரைகளை போதை மருந்து களாக மாற்றி மாணவர்கள் பயன்படுத்தும் அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து இந்த மாத்திரைகளை போதை மருந்தாக பயன்படுத்திய கல்லூரி மாணவன் ஒருவனை போலீசார் பிடித்தனர். அவரிடம் விசா ரணை மேற்கொண்ட போது தன்னுடைய நண்பர்கள் தனக்கு வழங்கியதாக கூறினார். அதே போல் 5 மாணவர்களுக்கு இந்த வலி நிவாரணி மாத்திரையை விற்பனை செய்த 4நபர்களை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். இவர்கள் அனைவரும் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியை  சேர்ந்த சுபாஷ், நிவாஸ், சிவக் குமார், கவியரசன் என்பது தெரியவந்த நிலையில் இவர்கள் வலி நிவாரணி மாத்திரைகள் நேரடியாக வரவைத்து அதனை மருந்துகடைகளுக்கு செல்லாமல் தங்கள் மூலமாகவே விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. மேலும் இந்த மாத்திரைகளை விற்பனை செய்து வந்த 4 பேரையும்  போலீசார் கைது செய்துள்ளனர்.

செட்டித்தாங்கல் ஊராட்சியில்  எரிவாயு குழாய் சேதம் சீரமைப்பு

ராணிப்பேட்டை, மார்ச் 13-  ராணிப்பேட்டை மாவட்டம், செட்டித்தாங்கல் ஊராட்சியில் வசிக்கும் ஒருவர் தனது வீட்டிற்கு குடிநீர் குழாய் அமைப்பதற்காக தெருவில் பள்ளம் தோண்டியபோது தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான எரிவாயு குழாயில் சேதம் ஏற்பட்டது ராணிப்பேட்டை  மாவட்டத்தில் நவ்லாக், மாந்தாங்கல், வானம்பாடி, செட்டித்தாங்கல், நரசிங்கபுரம், மணியம்பட்டு, சீக்கராஜபுரம் ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு பூமிக்கு அடியில் புதைக்கப்பட்டுள்ள  குழாய்கள் மூலம் சமையல் எரிவாயு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.   செட்டித்தாங்கல் ஊராட்சியில் பஜனை கோயில் தெருவில் வசிக்கும் வினோத் குமார் என்பவர் தனது வீட்டில் குடிநீர் குழாய் அமைப்பதற்காக வீட்டிற்கு வெளியே தெருவில் பள்ளம் தோண்டும்போது  இயற்கை எரிவாயு குழாயில் சேதம் ஏற்படுத்தி விட்டார். இதன் காரணமாக குழாயில் இருந்து  எரிவாயு வெளியேறியது. தகவல் அறிந்து இங்கு சென்ற தனியார் நிறுவன ஊழியர்கள் சேதமடைந்த குழாயை சீரமைத்தனர். இதனால்  பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது என்று எல்ஜி&பி  பிரதம் நிறுவனம் தெரிவித்துள்ளது.