districts

சென்னை டிபிஐ வளாகத்தில் தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் போராட்டம்

சென்னை, ஜூலை 30- தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்க ளின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும், பதவி உயர்வை பாதிக்கும் அரசாணை எண் 243-ஐ ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 31 கோரிக்கைகளை வலி யுறுத்தி மூன்றாவது நாளாக சென்னை பள்ளிக் கல்வித்துறை இயக்கு நர் அலுவலகத்தை முற்று கையிட முயன்ற ஆசிரி யர்களை காவல்துறை கைது செய்யப்பட்டனர். டிட்டோ ஜாக் சார்பில் ஜூலை 29, 30, 31 ஆகிய 3 நாட்களும் பள்ளி கல்வி இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் அறிவித்திருந்தது. அதன்படி, முதல் நாள் முற்றுகையிடும் போராட் டத்தை தொடங்கு வதற்கு பள்ளிக்கல்வி இயக்குநர் அலுவலக வளாகத்தை நெருங்கு  வதற்கு முன்பாகவே ஆசி ரியர் சங்க நிர்வாகிகளை காவல்துறையினர் கைது செய்தனர்.  இரண்டாவது நாள் போராட்டத்தின் போதும் இதேபோன்று கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், மூன்றா வது நாள் போராட்டம் தொட ரும் என்று போராட்டக்குழு அறிவித்துள்ளது.