கள்ளக்குறிச்சி,நவ14 - கள்ளக்குறிச்சி மாவட் டம், உளுந்தூர்பேட்டை வட்டத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 208 பயனாளிகளுக்கு ரூ.75.31 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கி னார். கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர் பேட்டை வட்டம்,ம.குன்னத்தூர் கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் புதனன்று நடைபெற்றது. இம்முகாம் உளுந்தூர்பேட்டை சட்ட மன்ற உறுப்பினர் மணிக் கண்ணன் முன்னிலையில் நடைபெற்றது. இம்முகாமினை ஆட்சி யர் துவக்கி வைத்து பேசு கையில், உளுந்தூர்பேட்டை வட்டத்திற்குட்பட்ட ம. குன்னத்தூர் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் துவக்கி வைக்கப் பட்டுள்ளது. இந்த மக்கள் தொடர்பு முகாமிற்கு பொதுமக்களிடமிருந்து 44 மனுக்கள் பெறப்பட்டு இதில் 24 மனுக்கள் ஏற்கப் பட்டுள்ளது மீதமுள்ள மனுக்கள் பரிசீலனையிலும் உள்ளது என்றார். இம்முகாமில் வருவாய் துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, என பல்வேறு துறைகள் சார்பில் 208 பயனாளிகளுக்கு ரூ.75.31 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இம்முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்திய நாராயணன், திருக்கோவி லூர் உதவி ஆட்சியர் ஆனந்த் குமார் சிங்,மாவட்ட பிற்படுத்தப்பட்ட நல அலுவலர் கீதா,தனித் துணை ஆட்சியர் (ச.பா.தி) குப்புசாமி, உளுந்தூர் பேட்டை வட்டாட்சி யர் ஆனந்த கிருஷ்ணன், அனைத்து துறை மாவட்ட நில அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், பயனாளிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.