பாலர் பூங்கா மதுரவாயல் பகுதி அமைப்புக் கூட்டம் ஞாயிறன்று (ஆக.26) நெற்குன்றத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பாலர் பூங்கா பொறுப்பாளர்கள் கே.வனஜகுமாரி, எஸ்.ஆனந்தகுமார் உள்ளிட்டோர் குழந்தைகளோடு கலந்துரையாடினர். பகுதி ஒருங்கிணைப்பாளராக ஷகிலா, தலைவராக சந்தோஷ், செயலாளராக ஹரிணி ஸ்ரீ ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.