தி.நகர் வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள பிரசாந்த் கோல்டன் டவர் கட்டிடத்தில் ‘பிரில்லியன்ஸ் என்ற பெயரில் வைர நகைக் கண்காட்சி துவங்கியுள்ளது. சென்னையில் பொங்கலை சிறப்பு செய்யும் வகையில் ஜாய்ஆலுக்காஸ் ஏற்பாடு செய்திருந்த துவக்க நிகழ்வில் திரைப்பட நட்சத்திரங்கள் பிரசாந்த், தியாகராஜன், அதுல்யா ரவி, வெற்றி, செல்வி. சுபிக்ஷா, நிறுவனத்தின் சில்லறை பிரிவு துணை பொதுமேலாளர் ஆடம்ஸ் ராஜேஷ் கிருஷ்ணன் மற்றும் வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.