districts

img

கோழி கழிவுகளால் தேசிய நெடுஞ்சாலையில் துர்நாற்றம்

கிருஷ்ணகிரி, பிப்.11-  மத்துாரிலிருந்து கிருஷ்ணகிரிக்கு செல்லும் சாலையில்,டோல்கேட் அருகில் மத்துார்,கண்ணன்டஹள்ளி கூட்ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கோழி இறைச்சி கடைக்காரர்கள் இரவு நேரத்தில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி கோழி கழிவுகளை மூட்டை, மூட்டையாக கொட்டிச் செல்கின்றனர்.   திருவண்ணாமலை, விழுப்புரம், மேல்மருவத்தூர்,உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும்,500 க்கும் மேற்பட்ட வாகனங்களில் இந்த இடத்தை கடந்து செல்கின்றனர்.  கோழிக்கழிவு நாற்றத்தால் வாகன ஓட்டிகளும்,பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு,நோய் தொற்று ஏற்படும் நிலை உள்ளது. நெடுஞ்சாலைத் துறை பராமரிப்பு துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.