திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி தனியார் பொறியியல் கல்லூரியில் செவ்வாயன்று (ஏப் 2) மாவட்ட தேர்தல் அலுவலர் த.பிரபுசங்கர் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர் அனைவரும் 100 விழுக்காடு வாக்களிப்பதை வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு நடமாடும் கண்காட்சி வாகனத்தை துவக்கி வைத்தார். நிகழ்வில் வாக்காளர் தின உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். உடன் திருவள்ளூர் மக்களவைத் தேர்தல் தூதுவர் கலைமாமணி பாடகர் மனோ உட்பட பலர் கலந்து கொண்டனர்.