புதுச்சேரி,டிச.26- புதுச்சேரியில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாக அமைச்சர் சந்திர பிரியங்காவிடம் கல்லூரி மாணவர்கள் புகார் தெரி வித்தனர். ஆதிதிராவிட மாணவர்களுக் காக புதுச்சேரியில் 16 விடுதி களும், காரைக்காலில் 10 , ஏனாமில் 2 என மொத்தம் 28 விடுதி கள் உள்ளன. இங்கு ஏழ்மை நிலை யிலுள்ள ஆதிதிராவிட மாண வர்கள் தங்கி கல்வி பயில்கின்ற னர். ஆனால், ஒதுக்கப்படும் நிதி முழுமையாக செயல்படாத சூழ லில் விடுதிகள் மோசமான நிலை யிலுள்ளன. அத்துடன் விடுதியி லுள்ள மாணவர்களுக்கு அசைவ உணவு முற்றிலும் நிறுத்தப் பட்டுள்ளது. முட்டைகூட தராத சூழலே உள்ளது. இதுதொடர்பாக இந்திய மாணவர் சங்கமும் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தின. இந்நிலையில், காலாப்பட்டில் தனியார் கட்டிடத்தில் இயங்கும் கல்லூரி மாணவர்களுக்கான ஆதிதிராவிட விடுதி மாண வர்கள், சம்பந்தப்பட்ட துறை அமைச்சரான சந்திர பிரியங்கா விற்கு புகார் தெரிவித்தனர். இதனையடுத்து அவர் நேரடியாக சென்று ஆய்வு செய்தார். மாணவர் விடுதி சுத்தமின்றி, முறையான பராமரிப்பு இன்றி காணப்பட்டது. அங்கு 3 துப்புரவாளர்கள் இருந்தும் தினமும் சுத்தம் செய்வ தில்லை. அறைகளில் சுவிட்சைத் தொட்டாலும் ஷாக் அடிப்பதை அமைச்சர் நேரில் பார்த்தார். கரோனா தொற்று காரணமாக விடுதிகள் மூடப்பட்டத்திலிருந்து மீன், முட்டை, இறைச்சி போன்ற அசைவ உணவுகள் வழங்கப்படு வதில்லை; மூன்று ஆண்டுகளாக அசைவம் தரப்படுவதில்லை என அமைச்சரிடம் மாணவர்கள் முறை யிட்டனர். மேலும், விடுதி தனியார் கட்டிடத்தில் இயங்குவது குறித்தும் அவர்கள் புகார் தெரி வித்தனர்.