அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் திருவொற்றியூரில் அலமேலு தலைமையில் ‘ஏழைகளின் பண்டிகை பஜார்’ என்ற தலைப்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில பொதுச்செயலாளர் ஏ.ராதிகா, மாவட்டச் செயலாளர் எஸ்.பாக்கியலட்சுமி, நிர்வாகிகள் செல்வகுமாரி, கஸ்தூரி, பாக்கியம், அம்சா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.