சென்னை, அக். 6- பூம்புகார் நகரில் அமைய வுள்ள கலைக் கல்லூரிக்கு தோழர் சிங்காரவேலர் பெயரை சூட்ட வேண்டும் என சிபிஎம் கொளத்தூர் பகுதி மாநாடு வலியுறுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்டம், கொளத்தூர் பகுதி 5ஆவது மாநாடு பூம்புகார் நகரில் தோழர்கள் முனுசாமி, அசோகன் நினைவரங்கில் பகுதிக்குழு உறுப்பினர் எம்.மூர்த்தி தலைமையில் ஞாயிறன்று (அக். 6) நடைபெற்றது. மூத்த உறுப்பினர் எஸ்.கோட்டீஸ்வரன் கட்சிக் கொடியை ஏற்றினார். பகுதிக்குழு உறுப்பினர் எம்.விஜயன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.பாக்கியலட்சுமி மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். பகுதிச் செயலாளர் பா.ஹேமா வேலை அறிக்கையையும், பகுதிக்குழு உறுப்பினர் ஜெ.ஸ்டாலின் வரவு,செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். மாவட்ட செயற்குழுகள் உறுப்பினர் மா.பூபாலன், ஆர்.ஜெயராமன் ஆகியோர் மாநாட்டை வாழ்த்தி பேசினர். முன்னதாக எம்.ஏ.அயூப்கான் வரவேற்றார். என்.சுப்பிரமணி நன்றி கூறினார். முன்னதாக சாதி ஒழிப்புக்கான குழந்தைகளின் கும்மி பாடல் நிகழ்ச்சி, ‘கொளத்தூரில் 3 ஆண்டுகளில் காலடி தடங்கள்’ என்ற சிவன் கண்காட்சி, உடல் தானம் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தென்குமரி நகர் சிட்டிபாபு மேம்பாலம் அருகே டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்,கொளத்தூர் தொகுதி அயனாவரம் தாலுகா 25ஆவது வட்டத்திற்குட்பட்ட எம்ஜிஆர் நகர் கங்கை அம்மன் கோவில் தெரு சிவசக்தி நகர் போன்ற இடங்களில் உள்ள அரசு நிலங்களில் வசிக்கும் சுமார் 2000 குடும்பங்களுக்கும் பட்டா வழங்க வேண்டும். பேப்பர் மில்ஸ் சாலையை அறிவித்துள்ளபடி 60 அடி சாலையாக விரிவாக்கம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பகுதிக்குழு தேர்வு 9 பேர் கொண்ட கொளத்தூர் பகுதி குழுவின் செய லாளராக பா.ஹேமா தேர்வு செய்யப்பட்டார்.