districts

img

பன்முக தன்மை கொண்டவர் ‘பூ’ இராமு இரங்கல் கூட்டத்தில் தலைவர்கள், கலைஞர்கள் பேச்சு

சென்னை, ஜூன் 28- திரைப்பட கலைஞரும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மூத்த நிர்வாகியுமான பூ இராமு மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ஊரப்பாக்கம் மயானத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய தலைவர்கள், எழுத்தா ளர்கள், திரைப்பட, நாடகத்துறை கலை ஞர்கள் அவரது பன்முகத்தன்மையைக் குறிப்பிட்டு அஞ்சலி செலுத்தினர்.

கே.கனகராஜ்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில  செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ் வாலிபர் சங்கம், தமுஎகச, மார்க்சிஸ்ட் கட்சி  ஆகியவற்றைச் சென்னை பகுதியில்  உருவாக்குவதற்குப் பல போராட்டங்களை யும் முயற்சிகளையும் செய்தவர் தோழர் இராமு என்றார். தோழர்களின் குடும்பங்களுக்கு உதவிகளைச் செய்தவர்., தோழர்கள் நாம் நினைத்திருந்தால் அவரோடு மேலும் நெருங்கிப் பழகி இருந்தால்  அவரை காப்பாற்றியிருக்க முடியும், தோழர் இராமுவிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பல நல்லதும் உள்ளது. அவரிட மிருந்த பலவற்றை தவிர்க்க வேண்டியதும் உள்ளது. கட்சியின் மாநில செயற்குழு சார்பில் அவருக்கு அஞ்சலியைச் செலுத்துகின்றோம் என்றார் கனகராஜ்.

கே.சாமுவேல்ராஜ்
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் மாநில பொதுச் செயலாளர் கே.சாமு வேல்ராஜ் பேசுகையில், வாழ்க்கையில் வெற்றி பெற்று வாழ்பவர்களை அதிகம் காணமுடியும், ஆனால் உண்மையாக வாழ்ந்தவர்களைக் காண்பது கடினம். அப்படி உண்மையாக வாழ்ந்தவர் தோழர்  ராமு. வாழ்க்கையால் நாம் பல நேரங்களில்  தனிமைப்பட்டு வருகிறோம் என்பதைத் தோழர் இராமுவின் மரணம் நமக்குச் சுட்டிக்காட்டியுள்ளது. தோழர் ராமுவின் மரணத்திற்கு வந்திருக்கும் பலரும் அவரோடு  இணைந்து பல்வேறு நேரங்களில் பயணித்த வர்கள். தோழர் கருப்பு கருணா, எம்.என்  எஸ்.வெங்கட்ராமன் ஆகியோரின் மறைவை  ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் தற்போது ராமுவின் மரணம் மேலும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர் களை ஈர்த்த தோழரிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது அதிகமாக உள்ளது என்றார் சாமுவேல்ராஜ்.

பிரளயன்
நாடக இயக்குநர் பிரளயன் பேசுகை யில், சென்னையில் 1990 முல் 2005 ஆம்  ஆண்டு வரை நாடக குழுக்கள் வளர்ச்சியில்  முக்கிய பங்கு வகித்தவர் தோழர் இராமு என்றார். பன்முகத் தன்மை கொண்டவர். ஒன்றுபட்ட சென்னை மாவட்டத்தில் 10 நாடகக் குழுக்களை உருவாக்கிய போது அதில் வீதி நாடகக் கலைஞர்கள் மேடையில் நடிக்க முடியுமா? என்று சவால் வந்த போது மேடையில் கலைத்திறனுடன் சவாலை வென்று காட்டியவர். தனது பன்முகத் தன்மையைக் வெளிப்படுத்தியவர் தோழர் இராமு என்று கூறினார்.

இரா.தெ.முத்து
1996ம் வருடம் மாநில மாநாட்டுப் பணியின்  போது ஆட்டோ இராமுவாக அறிமுகமான வர், கருத்துக்களை முன்வைத்து விவாதிப்பதில் கைதேர்ந்தவர், நாட்டுப்புற கலைஞர்கள் நலவாரியம், திருநங்கைகள் நல வாரியம் அமையக் காரணமாக இருந்தவர்.  இயல்பான நடிப்பால் திரை உலகில் ெஜாலித்தவர். அவரது இழப்பு தமுஎகச விற்கு பெரும் இழப்பு என்றார் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் இரா.தெ.முத்து. தோழர் சைதை ஜெ தலைமையில் நடை பெற்ற இரங்கல் கூட்டத்தில் சிந்தன் புக்ஸ் பதிப்பாளர் க. மாதவ், திரைப்பட இயக்கு நர்கள் சசி, ஷாகுல்,லெனின் பாரதி, தவில் விநாயகம், மார்க்சிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் செல்வா, ஹோமியாபதி மருத்துவர் பாலமுருகன், தமுஎகச தென்சென்னை மாவட்ட தலைவர் அசோக்சிங், செயலாளர் பகத்சிங் கண்ணன், திருவண்ணாமலை தமுஎகச நிர்வாகி பாலாஜி, குறும்பட இயக்குநர் தாஸ் உள்பட பலர் பேசினர்.