districts

img

பொங்கல் விளையாட்டு போட்டி: வாலிபர் சங்கத்தினர் நடத்தினர்

விழுப்புரம் ,ஜன.14- விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே நல்லாவூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொங்கல் விளையாட்டு போட்டியை முன்னாள் எம்எல்ஏ ஆர்.ராமமூர்த்தி தொடங்கி வைத்தார்.  நல்லாவூர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் தமிழர் திருநாள் பொங்கல் விழா நடைபெற்றது . அதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் , முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினருமான ஆர். ராமமூர்த்தி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கிரிக்கெட் போட்டியை துவக்கி வைத்து வீரர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்தார். விழாவில் வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சே.அறிவழகன், முன்னாள் மாவட்ட தலைவர் ஐ.சேகர், வானூர் வட்ட துணை தலைவர் ஏ.கலைமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகி எம். ஜானகிராமன் மற்றும் இளைஞர்கள், விளையாட்டு வீரர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.