districts

img

பொங்கல் விளையாட்டு போட்டி பரிசளிப்பு நிகழ்ச்சி

இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், சிஐடியு ஆகிய அமைப்புகள் சார்பில் 6வது ஆண்டாக பொங்கல் விளையாட்டு - பரிசளிப்பு நிகழ்ச்சி கோட்டூர்புரத்தில் நடைபெற்றது. நிகழ்விற்கு மாதர் சங்க நிர்வாகி பிரியா தலைமை தாங்கினார். மாதர் சங்க தென்சென்னை மாவட்டச் செயலாளர் ம.சித்ரகலா, மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் ரா.பாரதி மற்றும் சிவக்குமார் (வாலிபர் சங்கம்), அனாமிகா (மாணவர் சங்கம்), பிரகாஷ் (கட்டுமானம்), ஜி.வெங்கடேஷ் (சிபிஎம்) உள்ளிட்டோர் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளித்து பேசினர்.