கோயம்பேடு காய்கனி சந்தையில் இன்று முதல் பொங்கல் சந்தை
சென்னை, ஜன. 8- கோயம்பேடு மொத்த காய்கனி சந்தையில் வியாழக்கிழமை (ஜன. 9) முதல் பொங்கல் பண்டிகை சிறப்பு சந்தை துவங்க உள்ளது. இதற்காக பாது காப்பு பணிக்கு 300 காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அங்காடி நிர்வாகம் சார்பில், கோயம்பேடு மார்க்கெட்டில் வியாழக்கிழமை நள்ளிரவு முதல் 16ஆம் தேதி வரை சிறப்பு சந்தை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் மார்க்கெட் கடைக்காரர்கள் மட்டு மல்லாது வெளியில் இருந்து வரும் வியா பாரிகளும் தங்களது பொருட்களை விற்பனை செய்யலாம். இந்த சிறப்பு சந்தைக்கு விழுப்புரம், கடலூர், சேலம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கரும்பு, மஞ்சள் மற்றும் இஞ்சி விற்பனைக்கு வருகிறது. இந்த பொருட்களை ஏற்றிவரும் வாகனங்களை நிறுத்துவதற்கு 3 ஏக்கரில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு மார்க்கெட் மற்றும் சிறப்பு சந்தையில் போக்குவரத்து பாதிக்கும் என்பதால் அங்காடி நிர்வாகம் சார்பில், கோயம்பேடு போக்குவரத்து மற்றும் சட்டம்- ஒழுங்கு காவல் உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, போக்குவரத்து நெரிசலை சரிசெய்வ தற்கும் குற்றசம்பவங்கள் தடுப்பதற்கும் 300 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு சந்தையின்போது வியாபாரிகள், போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் வகையில் வியாபாரம் செய்யக்கூடாது. அங்காடி நிர்வாகம் கொடுத்த பகுதியில் மட்டுமே வியாபாரம் செய்ய வேண்டும். அங்காடி நிர்வாக குழு வுக்கு முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனி டையே மார்க்கெட் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள உயர் கோபுரத்தின் மீதிருந்து காவல்துறையினர் பைனாகுலர் மூலம் கண்காணிக்கின்றனர். மேலும் மாறுவேடத்திலும் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாரடைப்பு குறித்து சமூகத்தில் தீவிரமான விழிப்புணர்வு அவசியம் மருத்துவர்கள் வலியுறுத்தல்
சென்னை, ஜன.8- மாரடைப்பு குறித்து சமூகத்தில் தீவிரமான விழிப்புணர்வு அவசியம் என்று பிரபல இதய நோய் சிசிக்சை நிபுணரும் சென்னை காவேரி மருத்துவமனையின் இதய இடையீட்டு சிகிச்சை முதுநிலை நிபுணரும் குருதிக்குழாய் சிறப்பு மருத்துவருமான டாக்டர். சி. சுந்தர் கூறினார். சென்னை வடபழனி யில் உள்ள காவேரி மருத்துவமனையில் செயல் படும் மாரடைப்பிற்கான (எஸ்.டி.இ.எம்.ஐ) சிகிச்சை மேலாண்மை மையத்தின் திட்டமிட்ட மற்றும உடனடி தலையீட்டின் காரண மாக பல நோயாளிகளின் உயிர்கள் காப்பாற்றப் பட்டன. இதையொட்டி செய்தியாளர்களிடம் பேசிய அவர், டிசம்பர் மாதத்தில் மட்டும் தீவிர மான மாரடைப்பால் பாதிக்கப்பட்ட 15 பேருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது என்றார். அதாவது, சராசரி யாக ஒரு நாள் விட்டு ஒரு நாள் உயிருக்கு ஆபத்தான மாரடைப்பால் அவதிப்பட்ட தலா ஒரு நோயாளிக்கு சிகிச்சை யளித்திருப்பது காவேரி மருத்துவமனையின் நற்பெயருக்கு வலு சேர்த்துள்ளது என்றும் அவர் கூறினார். பொதுவாக எது மார டைப்பு என்பது குறித்து சமுகத்தில் போதிய விழிப்புணர்வு இல்லை என்றும் அவர் கூறினார். நெஞ்சு வலியை வாயுத் தொல்லை என நினைத்து மருத்துவமனைக்கு செல்லாமல் இருப்பது, வலி வந்த 6 மணிநேரத்திற்குள் சிகிச்சையை தொடங்காமல் இருப்பது ஆகியவை உயிரிழப்புக்கு வழி வகுத்து விடும் என்றும் அவர் கூறினார். மாரடைப்பால் உயி ருக்கு போராடும் நோயாளி களுக்கு உடனடியாக சிகிச்சையை தொடங்கும் வகையில் வடபழனி காவேரி மருத்துவமனை யில் மாரடைப்பிற்கான சிகிச்சை மேலாண்மை மையம்24 மணிநேரமும் தயார் நிலையில் உள்ளதாக மருத்துவமனையின் இணை நிறுவனர் டாக்டர் அரவிந்த் செல்வராஜ் தெரி வித்தார். மருத்துவமனைக்குள் நோயாளி அனுமதிக்கப்படு வதிலிருந்து ஆஞ்சியோ பிளாஸ்ட்டி இடையீட்டு சிகிச்சையை தொடங்கு வதற்கு சர்வதேச அளவில் 90 நிமிடங்கள் ஆகும் போது இங்கு வெறும் 49 நிமிடங்களில் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் அவர் கூறினார். இது மருத்துவத்துறையில் சென்னை வளர்ந்துள்ளதை எடுத்துக் காட்டுவதாகவும் அவர் கூறினார்.
லாரி மோதி முதியவர் பலி
சென்னை, ஜன. 8- சென்னை கோடம்பாக்கத்தில் மாநகராட்சி குப்பை லாரி மோதி முதியவர் உயிரிழந்தார். கோடம்பாக்கம் சியமளா வந்தனா தெருவைச் சேர்ந்தவர் தியாகராஜன் (73). இவர், கோடம்பாக்கம் விஸ்வநாதபுரம் பிரதான சாலையில் செவ்வாய்க்கிழமை நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த சென்னை மாநகராட்சி குப்பை லாரி, தியாகராஜன் மீது மோதியதில், பலத்தக் காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு காவல் துறையினர் தியாகராஜன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, அந்த லாரியை ஓட்டி வந்த மேற்கு மாம்பலம் ஜோதி ராமலிங்கம் தெருவைச் சேர்ந்த மணிகண்டன் (28) என்பவரை கைது செய்தனர்.
போகி பண்டிகை: பழைய பொருட்களை எரிக்காதீர் சென்னை மாநகராட்சி வேண்டுகோள்
சென்னை, ஜன. 8- போகி பண்டிகையையொட்டி பழைய பொருட்களை எரிக்காதீர் என பொதுமக்களுக்கு மாநகாராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. பொங்கல் பண்டிகை ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. பொங்கலுக்கு முந்தைய தினம் போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அப்போது பழைய துணி, பிளாஸ்டிக் பொருட்கள், டயர் மற்றும் ரப்பர் ட்யூப் போன்றவை எரிக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், போகி பண்டிகையையொட்டி பழைய துணிகள், பிளாஸ்டிக் பொருட்கள், டயர் மற்றும் ரப்பர் ட்யூப் போன்றவற்றை எரிப்பதினால் காற்று மாசு ஏற்படுவதுடன் மக்களுக்கும் உடல் நலக்குறைவு ஏற்படுகிறது. எனவே, பழைய பொருட்களை தனியாக பிரித்து தூய்மை பணியாளர்கள் அதாவது குப்பைகளை சேகரிக்கும் தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைத்தால் அவர்கள் அதனை சேகரித்து வழக்கமாகக் கொண்டு சென்று எரியூட்டும் பகுதியில் எரியுட்டுவார்கள் என்று தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரவுள்ள போகி பண்டிகையில் மக்கள் பழைய பொருட்களை எரிக்க வேண்டாம் என்றும், அதனை தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் சென்னை மாநகராட்சி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
லஞ்சம் கேட்டதாக ஓசூர் வரி வசூலிப்பாளர் பணியிடை நீக்கம்
கிருஷ்ணகிரி, ஜன. 8 - ஓசூர் மாநகராட்சியில் சொத்து வரி வசூலிக்க லஞ்சம் கேட்ட வரி வசூலிப்பாளரை ஆணையா் ஸ்ரீகாந்த் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்ட. ஒசூா் மாநகராட்சி வரி வசூலிப்பாளராக சின்ன ஜெயகுமார் பணிபுரிந்து வருகிறார். இவரது தந்தை மாதையன் மாநகராட்சியில் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றிக்கொண்டிருந்த காலத்தில் இறந்ததால் சின்ன ஜெயகுமாருக்கு கருணை அடிப்படையில் வரி வசூலிப்பாளராக பணி நியமனம் வழங்கப்பட்டது. ஏற்கெனவே இவர் மீது பல்வேறு புகார்கள் வந்ததால்,சில மாதங்களுக்கு முன்பு மாநகராட்சி பொது சுகாதாரத் துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதனிடையே சொத்துவரி வசூலிக்கும் போது ஒருவரிடம் இவர் லஞ்சம் கேட்கும் ஆடியோவை சிலர் மாநகராட்சி ஆணையருக்கு அனுப்பி வைத்தனர்.அதில் மாநகராட்சி ஆணையருக்கு பணம் கொடுக்க வேண்டும் எனக் கூறி சின்ன ஜெயகுமார் லஞ்சம் கேட்பது பதிவாகியுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்திய ஆணையர் ஸ்ரீகாந்த் சின்ன ஜெயகுமாரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். அத்துடன் சொத்து வரி வசூலிக்கும் பணியை சரியாக செய்ய தவறியதாக சிறப்பு வருவாய் ஆய்வாளா் சுரேஷுக்கு விளக்கம் கேட்டு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
வந்தவாசி மக்களுக்கு விலையில்லா வேட்டி சேலை வழங்க கோரிக்கை
திருவண்ணாமலை,டிச.8- திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டத்திற்கு உட்பட்ட கிராமங்களில் கடந்த ஆண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கான விலையில்லா வேட்டி சேலை வழங்கப்படவில்லை. இந்நிலையில், இந்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு முன்பாக அனைவருக்கும் விலையில்லா வேட்டி சேலை வழங்க கோரி சிபிஎம் சார்பில் வந்தவாசி வட்டச்செயலாளர் அப்துல்காதர் தலைமையில், வந்தவாசி வட்ட வழங்கல் அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது. உடன் சிபிஎம் மாவட்ட செயலாளர் ப.செல்வன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் யாசர் அராபத், சுகுணா, நகரச்செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் மாவட்ட துணை செயலாளர் ரேணுகா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தொலைக்காட்சி-பத்திரிகைகளுக்கு பேரவைத் தலைவர் எச்சரிக்கை
சென்னை, ஜன.8- தமிழ்நாடு சட்டமன்றத் தலைவர் மு.அப்பாவு பேரவையில் புதன்கிழமை (ஜன.8) அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதன்படி, தமிழ்நாடு சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு அறிவிப்புகள், விதி எண்கள் 55, 56 போன்ற அறிவிப்புகள் சட்டமன்றப் பேரவைச் செயலர், சட்டப் பேரவைத் தலை வரிடம் தரும்போது, அதை அனுமதித்து, அதை சட்டமன்றத்தில் நாம் எடுத்துக் கொள்ளலாம்; விவாதிக்கலாம். ஆனால், சில உறுப்பினர்கள்—நான் பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை. என்னிடம் கொடுத்த அறிவிப்புகளை எழுதி, உடனடியாக youtube, தொலைக்காட்சி, பத்திரிகைகளுக்கு கொடுப்பதை தயவு செய்து நிறுத்திக்கொள்ள வேண்டுகிறேன். காரணம், அதுகுறித்து பேரவை விதி 36, உட்பிரிவு 5, மிகத் தெளிவாக குறிப்பிடு கிறது. விதி 36, உட்பிரிவு 5-ல், கொடுக்கப்படும் முன்ன றிவிப்பினை பேரவைத் தலைவர் அனு மதித்து, உறுப்பினர்களுக்கு அனுப்பாத வரை, அதை உறுப்பினரோ அல்லது வேறு எவரோ வெளியிடக்கூடாது. முதல், தொலைக்காட்சிகள், பத்திரிகைகள், ஊடகங்கள் உள்பட அனைத்திற்கும் சேர்த்தே சொல்கிறேன். அவ்வாறு பேரவை உறுப்பினர்கள் யாராவது இது சம்பந்தப்பட்ட, இதுபோன்ற அறி விப்புகளை எழுதித்தந்தால் பிரசுரிக்கவும் கூடாது. ஆகவே, பேரவை விதிக்குட்பட்டு, நீங்கள் நடந்து கொள்ள வேண்டும் என்று நான் உங்களை கேட்டுக்கொள்கிறேன் என்றார். தொடர்ந்து பேசிய அவர், ஜனவரி 6 ஆம் தேதி பேரவை நிகழ்ச்சிகள் நேரடி ஒளி பரப்பு செய்யப்பட்டது குறித்து, ஆளு நரும், அதேபோல இங்கே பல்வேறு கட்சி களைச் சார்ந்தவர்களும் தங்களுடைய கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். முதலில் இந்நிகழ்வு குறித்து ஆளுநர் ஒரு கருத்தை எக்ஸ் வலைதளத்தில் நாடாளு மன்றத்தில் பின்பற்றப்படுகிற நடை முறையைக் குறிப்பிட்டு, ஒரு கருத்தை வெளியிட்டு, பின்னர் அதை நீக்கி யுள்ளார்கள். பின்னர் அனைத்துச் சட்ட மன்றங்களிலும் பின்பற்றப்படுகிற நடை முறை எனக்குறிப்பிட்டு, எக்ஸ் தளத்தில் வெளியிட்டு பின்னர் அதையும் நீக்கியுள்ளார்கள். பின்னர் வேறு ஒரு கருத்தைத் தெரிவித்தார்கள். அடுத்து, இந்த மன்றத்தின் உறுப்பினர் வானதி சீனிவாசன் ஆளுநரின் கருத்தை, அப்படியே தன்னுடைய கருத்தாகவும் வெளியிட்டுள்ளார். அவரது கருத்திலேயே தடுமாற்றம் இருந்துள்ளது. அதையும் நீக்கிவிடுவார்கள் என்று அனைவரும் பேசிக்கொள்கிறார்கள் என்றும் தெரி வித்தார். மாற்றுத் தலைவர்கள் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் மாற்றுத் தலைவர்களாக க.அன்பழகன், நா.ராமகிருஷ்ணன், எஸ்.ஆர்.ராஜா, உதயசூரியன், செஞ்சி எஸ்.மஸ்தான், துரை. சந்திரசேகர் ஆகியோரை பேரவைத் தலைவர் அறிவித்தார். நன்றி தெரிவிக்கும் தீர்மானமும்-வருத்தமும் 2025-ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு சட்டப்பேரவையின் கூட்டத் தொடர் ஜன.6 அன்று துவங்கிய நிலையில், உரையை வாசிக்காமலேயே ஆளுநர் ஆர்.என். ரவி வெளியேறினார். அதனைத் தொடர்ந்து, விதி எண் 17ஐ தளர்த்தி ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்தத் தீர்மானத்தில் "ஆளுநர் உரையில் அச்சிடப்பட்ட பகுதிகள் மட்டுமே அவைக் குறிப்பில் இடம்பெற வேண்டும்" எனக் கூறப்பட்டிருந்தது. இந்தத் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேறியது. இந்த நிலையில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை புதன்கிழமை (ஜன.8) கம்பம் தொகுதி திமுக உறுப்பினர் நா. இராமகிருஷ்ணன் முன்மொழிந்தார். அதில் தமிழ்நாடு அரசால் ஆளுநருக்கு வழங்கப்பட்ட ஆளுநர் உரையைப் படிக்காமல் அவர் சென்றதற்கு இப்பேரவை தனது வருத்தத்தை பதிவு செய்கிறது என்றார். மேலும், பேரவையில் பதிவு செய்யப்பட்ட ஆளுநர் உரைக்கு இப்பேரவை உறுப்பினர்கள் நன்றியுடைய வர்கள் என்றும் அவர் கூறினார்.
கைதிகள் தயாரித்த பொருட்கள் விற்பனையில் முறைகேடு!
அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை நீதிமன்றம் உத்தரவு
சென்னை, ஜன. 8- சிறை கைதிகள் தயாரித்த பொரு ட்கள் விற்பனையில் அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டதற்கான முகாந்திரம் இருந்தால் துறை ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. புதுச்சேரியைச் சேர்ந்த கோகிலா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத் தில் மனு ஒன்றை தாக்கல் செய்தி ருந்தார். அந்த மனுவில், புழல் சிறை யில் தண்டனை கைதியாக உள்ள தனது கணவர் சிறையில் பார்த்த பணிக்காக அவருக்கு வழங்கப்படும் ஊதியம் 4 மாதங்களாக வழங்கப்பட வில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி கள் எஸ்.எம்.சுப்ரமணியம் மற்றும் எம்.ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வின் கீழ் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஐரான வழக்கறிஞர் புகழேந்தி, தமிழகத் தில் உள்ள சிறைகளில் கைதிகள் தயா ரித்த பொருட்களை விற்பனை செய்த தில் 14 கோடி ரூபாய் அளவுக்கு முறை கேடு நடந்துள்ளதாக, மத்திய தணிக்கை துறை கூறியது எனத் தெரி வித்து அதுதொடர்பாக செய்தி தாள்களில் வெளியான செய்தியை தாக்கல் செய்தார். இந்த விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக் கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு மீண்டும் புதன் கிழமை (ஜன. 8) விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு தரப்பில் ஆஜ ரான கூடுதல் தலைமை வழக்கறி ஞர், இந்த விவகாரம் தொடர்பாக அரசு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை யின் அறிக்கையை தாக்கல் செய்தார். அதில், முறைகேடு தொடர் பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதா கவும், சம்பவம் தொடர்பாக ஏற்கெனவே மூன்று அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள் ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப் பட்டது. இதை கேட்ட நீதிபதிகள், தவறு செய்தவர்களை சீர்திருத்து வதற்கு சிறைக்கு அனுப்புகிறோம். ஆனால் சிறையில் இருக்கும் சிறைத்துறை அதிகாரிகள் தவறிழைப்பது முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது. இந்த விவ காரத்தில் தவறிழைத்த உயர் அதி காரிகள் உட்பட அனைவர் மீதும் நட வடிக்கை எடுக்க வேண்டும். தவறி ழைத்ததற்கான முகாந்திரம் இருந்தால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தர விட்டனர்.
பணிபுரியும் பெண்களுக்கான சிறந்த நகரங்கள் பட்டியலில் சென்னை! அரசு செயல் திறன், பாதுகாப்பு வரிசையில் திருவனந்தபுரம் முதலிடம்
சென்னை, ஜன.8- பன்முகத்தன்மை, சமவாய்ப்பு மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய தீர்வுகளில் நாட்டின் முன்னணி பணி யிட கலாச்சார ஆலோசனை நிறுவன மான அவதார் குழுமம் 'இந்தியாவில் பெண்களுக்கான சிறந்த நகரங்கள் ' என்னும் ஆராய்ச்சியின் முடிவுகளின் மூன்றாவது பதிப்பை புதன்கிழமை (ஜன.8) வெளியிட்டது. பணிபுரியும் பெண்களுக்கான உள்ளடக்கிய, பாதுகாப்பான, மீளும் தன்மை கொண்ட, நீடித்த நகரங்களில் ஒன்றாக சென்னை இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. மேலும் பெண்களுக்கான இந்தியாவில் மிகச் சிறந்த பட்டியலில் சென்னை, கோயம் புத்தூர், திருச்சிராப்பள்ளி, வேலூர், மதுரை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய 8 நகரங்களுடன் கணக்கெடுப்பு முடிவுகளில் தமிழ்நாடு ஆதிக்கம் செலுத்துகிறது. இது தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவதார் குழுமத்தின் நிறுவனர்-தலைவர் டாக்டர் சவுந்தர்யா ராஜேஷ், “நகரங்களே வாய்ப்புகளுக்கான அடித்தளம். பெண்கள் எப்படி வாழ்கிறார்கள், வேலை செய்கிறார்கள், வளர்கிறார் கள் என்பதை நகரங்களே வடிவமைக் கின்றன. எனவே, பெண்களின் முன்னேற்றம், அவர்களையும் உள்ள டக்கி முன்னேற்றுவதற்கு நமது நகரங் களின் அடிப்படைக் கொள்கைகள் - கலாச்சார அமைப்பு பற்றிய தெளி வான புரிதல் முக்கியமானது. அவதார் வெளியிடும் வருடாந்திரக் குறியீடான ‘இந்தியாவில் பெண்களுக்கான சிறந்த நகரங்கள்’ துல்லியமான, மையப்படுத் தப்பட்ட தரவு மற்றும் ஆதாரம் சார்ந்த அணுகுமுறையைப் பயன்படுத்தி கணக்கெடுப்பை மேற்கொள்கிறது என்றார். மேலும், 2047க்குள் வளர்ச்சிய டைந்த நாடு என்ற நமது நாட்டின் கனவை நனவாக்கவேண்டும் என்றால், ஆண்களுக்கு இணையாக இந்தியப் பெண்கள் பல்வேறு துறையில் வல்லு நர்களாக இடம்பெறவேண்டும். நகரங் கள் உண்மையிலேயே பாலினத்தை உள்ளடக்கியதாகவும், பெண்களின் பலத்தை மேம்படுத்தக்கூடிய சூழலை யும் வழங்கினால் மட்டுமே இது சாத்தி யமாகும் என்றும் அவர் சுட்டிக்காட் டினார். 2024 இல் பெண்களுக்கான மிகச் சிறந்த முதல் 10 நகரங்களின் பட்டிய லில் பெங்களூரு, சென்னை, மும்பை, ஹைதராபாத், புனே, கொல்கத்தா, அகமதாபாத், டெல்லி, குருகிராம், கோயம்புத்தூர் ஆகியவை இடம் பெற்றுள்ளன. சமூகம், தொழில்துறை, உள்ள டங்கிய தன்மை இரண்டிலும் ஒப்பீட் டளவில் அதிக மதிப்பெண்களைப் பெற்று, பெண்களை அதிகம் உள்ள டக்கிய பிராந்தியமாக தென்னிந்தியா உள்ளது. தென்னிந்திய நகரங்களை உள்ளடக்கிய சராசரி மதிப்பெண் 18.56. தென்னிந்தியாவுக்கு நெருக்க மாக மேற்கு இந்தியா 16.92 மதிப் பெண்களுடன் பின்தொடர்கிறது. இந்த அம்சங்களில் மத்திய மற்றும் கிழக்கு பிராந்தியங்கள் பின்தங்கியுள்ளன, முறையே 11.79 மற்றும் 10.55 சரா சரியை அவை கொண்டுள்ளன. குறைந்த தொழில்துறை வளர்ச்சி, குறைந்த வாய்ப்புகளே இதற்குக் காரணம். கேரளா முன்னணி மாநிலங்கள் வரிசையில் அதிக பட்ச சராசரியாக 20.89 மதிப்பெண்க ளுடன் இடது ஜனநாயக முன்னணி அரசு ஆளும் கேரளா முன்னணியில் உள்ளது, தெலங்கானா 20.57, மகாராஷ் டிரா 19.93, தமிழ்நாடு 19.38 மற்றும் கர்நாடகா 17.50 ஆகிய மதிப்பெண்க ளுடன் அடுத்தடுத்து உள்ளன. உள்கட்டமைப்புக்கான அதிகபட்ச மதிப்பெண்ணைப் ஹைதராபாத் (8.01) பெற்றுள்ளது (நன்கு இணைப் புகள் கொண்ட பொதுப் போக்கு வரத்து வசதி, பிற பயண வசதிகளே இதற்கு காரணம்). அடுத்து மும்பை (7.64) உள்ளது. சிறிய நகரங்களில் கோயம்புத்தூர் (7.75), கொச்சி (7.41) ஆகியவை உள்கட்டமைப்பு வசதி களில் அதிக மதிப்பெண்கள் பெற்றுள் ளன. அரசாங்க செயல்திறன் திருவனந்த புரம் (8.15), புனே(7.06) சிறந்த நிர்வாகத் திறனுக்கு அதிகமதிப்பெண்களைப் பெற்றுள்ளன. திருவனந்தபுரம் (7.43), மும்பை (7.19), ஹைதராபாத் (6.95) ஆகியவை பாதுகாப்பில் முன்னணியில் உள்ளன. அதே நேரத்தில் பெங்களூரு (6.17), கொச்சி (6.02), குருகிராம் (5.60) ஆகியவை ஒப்பீட்டளவில் குறைவான பாது காப்பைக் கொண்டிருப்பதாக பெண்கள் மதிப்பிடுகின்றனர்.சென்னை, ஜன.8- பன்முகத்தன்மை, சமவாய்ப்பு மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய தீர்வுகளில் நாட்டின் முன்னணி பணி யிட கலாச்சார ஆலோசனை நிறுவன மான அவதார் குழுமம் 'இந்தியாவில் பெண்களுக்கான சிறந்த நகரங்கள் ' என்னும் ஆராய்ச்சியின் முடிவுகளின் மூன்றாவது பதிப்பை புதன்கிழமை (ஜன.8) வெளியிட்டது. பணிபுரியும் பெண்களுக்கான உள்ளடக்கிய, பாதுகாப்பான, மீளும் தன்மை கொண்ட, நீடித்த நகரங்களில் ஒன்றாக சென்னை இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. மேலும் பெண்களுக்கான இந்தியாவில் மிகச் சிறந்த பட்டியலில் சென்னை, கோயம் புத்தூர், திருச்சிராப்பள்ளி, வேலூர், மதுரை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய 8 நகரங்களுடன் கணக்கெடுப்பு முடிவுகளில் தமிழ்நாடு ஆதிக்கம் செலுத்துகிறது. இது தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவதார் குழுமத்தின் நிறுவனர்-தலைவர் டாக்டர் சவுந்தர்யா ராஜேஷ், “நகரங்களே வாய்ப்புகளுக்கான அடித்தளம். பெண்கள் எப்படி வாழ்கிறார்கள், வேலை செய்கிறார்கள், வளர்கிறார் கள் என்பதை நகரங்களே வடிவமைக் கின்றன. எனவே, பெண்களின் முன்னேற்றம், அவர்களையும் உள்ள டக்கி முன்னேற்றுவதற்கு நமது நகரங் களின் அடிப்படைக் கொள்கைகள் - கலாச்சார அமைப்பு பற்றிய தெளி வான புரிதல் முக்கியமானது. அவதார் வெளியிடும் வருடாந்திரக் குறியீடான ‘இந்தியாவில் பெண்களுக்கான சிறந்த நகரங்கள்’ துல்லியமான, மையப்படுத் தப்பட்ட தரவு மற்றும் ஆதாரம் சார்ந்த அணுகுமுறையைப் பயன்படுத்தி கணக்கெடுப்பை மேற்கொள்கிறது என்றார். மேலும், 2047க்குள் வளர்ச்சிய டைந்த நாடு என்ற நமது நாட்டின் கனவை நனவாக்கவேண்டும் என்றால், ஆண்களுக்கு இணையாக இந்தியப் பெண்கள் பல்வேறு துறையில் வல்லு நர்களாக இடம்பெறவேண்டும். நகரங் கள் உண்மையிலேயே பாலினத்தை உள்ளடக்கியதாகவும், பெண்களின் பலத்தை மேம்படுத்தக்கூடிய சூழலை யும் வழங்கினால் மட்டுமே இது சாத்தி யமாகும் என்றும் அவர் சுட்டிக்காட் டினார். 2024 இல் பெண்களுக்கான மிகச் சிறந்த முதல் 10 நகரங்களின் பட்டிய லில் பெங்களூரு, சென்னை, மும்பை, ஹைதராபாத், புனே, கொல்கத்தா, அகமதாபாத், டெல்லி, குருகிராம், கோயம்புத்தூர் ஆகியவை இடம் பெற்றுள்ளன. சமூகம், தொழில்துறை, உள்ள டங்கிய தன்மை இரண்டிலும் ஒப்பீட் டளவில் அதிக மதிப்பெண்களைப் பெற்று, பெண்களை அதிகம் உள்ள டக்கிய பிராந்தியமாக தென்னிந்தியா உள்ளது. தென்னிந்திய நகரங்களை உள்ளடக்கிய சராசரி மதிப்பெண் 18.56. தென்னிந்தியாவுக்கு நெருக்க மாக மேற்கு இந்தியா 16.92 மதிப் பெண்களுடன் பின்தொடர்கிறது. இந்த அம்சங்களில் மத்திய மற்றும் கிழக்கு பிராந்தியங்கள் பின்தங்கியுள்ளன, முறையே 11.79 மற்றும் 10.55 சரா சரியை அவை கொண்டுள்ளன. குறைந்த தொழில்துறை வளர்ச்சி, குறைந்த வாய்ப்புகளே இதற்குக் காரணம். கேரளா முன்னணி மாநிலங்கள் வரிசையில் அதிக பட்ச சராசரியாக 20.89 மதிப்பெண்க ளுடன் இடது ஜனநாயக முன்னணி அரசு ஆளும் கேரளா முன்னணியில் உள்ளது, தெலங்கானா 20.57, மகாராஷ் டிரா 19.93, தமிழ்நாடு 19.38 மற்றும் கர்நாடகா 17.50 ஆகிய மதிப்பெண்க ளுடன் அடுத்தடுத்து உள்ளன. உள்கட்டமைப்புக்கான அதிகபட்ச மதிப்பெண்ணைப் ஹைதராபாத் (8.01) பெற்றுள்ளது (நன்கு இணைப் புகள் கொண்ட பொதுப் போக்கு வரத்து வசதி, பிற பயண வசதிகளே இதற்கு காரணம்). அடுத்து மும்பை (7.64) உள்ளது. சிறிய நகரங்களில் கோயம்புத்தூர் (7.75), கொச்சி (7.41) ஆகியவை உள்கட்டமைப்பு வசதி களில் அதிக மதிப்பெண்கள் பெற்றுள் ளன. அரசாங்க செயல்திறன் திருவனந்த புரம் (8.15), புனே(7.06) சிறந்த நிர்வாகத் திறனுக்கு அதிகமதிப்பெண்களைப் பெற்றுள்ளன. திருவனந்தபுரம் (7.43), மும்பை (7.19), ஹைதராபாத் (6.95) ஆகியவை பாதுகாப்பில் முன்னணியில் உள்ளன. அதே நேரத்தில் பெங்களூரு (6.17), கொச்சி (6.02), குருகிராம் (5.60) ஆகியவை ஒப்பீட்டளவில் குறைவான பாது காப்பைக் கொண்டிருப்பதாக பெண்கள் மதிப்பிடுகின்றனர்.