districts

img

பாரம்பரிய முறையில் பொங்கல் விழாவை கொண்டாடிய கல்லூரி மாணவிகள்

சென்னை, ஜன.12- சென்னை, ஆர்.ஏ. புரத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர்.-ஜானகி மகளிர் கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை  (ஜன.12) நடைபெற்ற பொங்கல் விழாவில் மாணவிகள் பாரம்பரிய முறையில் மகிழ்ச்சியுடன் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடினர்.   நான்காயிரத்திற்கும் மேற்பட்ட மாணவி கள் வண்ண மயமான தாவணி, பட்டுப் புடவைகளை அணிந்து வந்து இந்த விழாவில் பங்கேற்றனர். இந்தக் கொண்டாட்டத்திற்காகவே சிறப்பாக உருவாக்கப்பட்டி ருந்த கிராமப்புற சூழல் பார்ப்பவர்களின் கவ னத்தை ஈர்ப்பதாக அமைந்தது. கோலி, கில்லி, பம்பரம், உறியடித்தல் போன்ற பாரம்பரிய விளை யாட்டுகளை விளையாடி மகிழ்ந்த மாணவிகள், தமிழர்களின் கலாச் சார உடைகளை அணிந்து கோலாட்டம், கும்மி யாட்டம், கரகாட்டம், ஒயி லாட்டம் போன்ற நாட்டுப் புற நடனங்களை ஆடினர். பெரிய பானையில் பொங்கல் பொங்கி வரு வதைக் கண்ட மாணவியர் அனைவரும் சேர்ந்து ''பொங்கலோ பொங்கல்'' என்று உற்சாக ஒலி எழுப்பினர்.      “தொழில்நுட்ப வளர்ச்சி யின் காரணமாக வேகமாக மாறிவரும் இவ்வுலகில், நம்முடைய மதிப்பு மிகுந்த மரபையும், விழு மியங்களையும் நாம் மறக்காமல் இருப்பது முக்கியம். அந்த வகையில் நம்முடைய பண்பாட்டின் வளத்தினையும், பெரு மையையும் நம்முடைய இளைய சமுதாயம் உணர்ந்து, அதனை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதற்கு இவ்வாறான விழாக்கள் பெரிதும் உதவும் என்று டாக்டர் எம்.ஜி.ஆர்.-ஜானகி மகளிர் கல்லூரியின் முதல்வர் முனைவர் ஆர். மணிமேகலை தெரி வித்தார்.