சென்னை, டிச. 25 - மக்கள் கோரிக்கைகளுக்கான போராட்டங்களை உருவாக்கும் மையங்களாக மார்க்சிஸ்ட் கட்சி யின் அலுவலகங்கள் செயல்படும் என்று அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார். கட்சியின் அண்ணாநகர் பகுதி அலுவலகம், தோழர் ஏ.பி.செல்வம் இல்லம், பாலவிஹார் அருகில், கீழ்ப்பாக்கம் கார்டன், சென்னை-10 என்ற முகவரியில் அமைக்கப் பட்டுள்ளது. இந்த அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. இந்த அலுவலகத்தை திறந்து வைத்த ஜி.ராமகிருஷ்ணன், பகுதிக் குழு அலுவலகம் செயல்பட தனது இல்லத்தை வழங்கிய தோழர் ஏ.பி. செல்வத்திற்கு பாராட்டு தெரிவித் தார். மேலும் அவர் பேசுகையில், “அண்மையில் நடைபெற்ற தேர்தலில் இமாச்சல் பிரதேச மாநில ஆட்சியையும், தில்லி மாநகராட் சியையும் பாஜக இழந்துள்ளது. 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத் தேர்தலிலும் பாஜக தோற்கடிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க இந்த அலுவலகம் பயன்படும்.
மக்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் போராட்டத்தை மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து நடத்தும்” என்றார். மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத் பேசுகையில், “300 ரூபாய் ஊதியத்தில் பயிற்சி வழக்கறிஞராக இருந்த ஜி.ராம கிருஷ்ணன், அதைவிடுத்து 150 ரூபாய் அலவன்ஸ் பெற்றுக் கொண்டு கட்சியின் முழுநேர ஊழிய ராக மாறினார். அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட மருத்துவக் கல்லூரிகள் கூடுதலாக கட்டணத்தை வசூலித்தன. அதனை எதிர்த்து ஜி.செல்வா தொடுத்த வழக்கால், அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே வசூலிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. மார்க்சிஸ்ட் கட்சியை போன்று நேர்மையாக செயல்பட்டால், அனைத்து அரசு அமைப்புகளும், ஜனநாயகமும் பாதுகாக்கப்படும்”என்றார். திறமையான வழக்கறிஞர்கள் நீதிபதிகளாக வருவதில்லை என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் வேத னைப்படுகின்றனர். ஏனெனில் தற்போதுள்ள ஒருபகுதி வழக்கறி ஞர்களுக்கு சமூக நோக்கம் இல்லை. பணம்தான் நோக்கமாக இருக்கிறது. எனவே, மார்க்சிய சிந்த னையுள்ளவர்களை நீதிபதிகளாக தேர்ந்தெடுங்கள். மக்களின் நம்பிக்கையை காப்பாற்றுங்கள் என்றும் அவர் கூறினார். மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா பேசுகை யில், “குடிசைகளை ஆட்சியாளர் கள் அகற்றியபோது, போராடி அதே இடத்தில் அடுக்குமாடி குடியி ருப்புகளை பெற்றுக்கொடுத்தது செங்கொடி இயக்கம். ஏராளமான நெருக்கடிகள் வந்தபோதும் கட்சிக்காக துணிந்து நிற்பவர்களின் படையாக மார்க்சிஸ்ட் கட்சி உள்ளது.
சிங்காரவேலர் காட்டிய வழியில் சென்னையை உருவாக்கும் பணியை தொடர்வோம்” என்றார். இந்த விழாவையொட்டி கட்சியின் மாநிலக்குழு அலுவலக கட்டிட நிதியாக, பகுதிக்குழு சார்பில் இரண்டாவது தவணையாக ஜி.ராமகிருஷ்ணனிடம் 40 ஆயிரம் ரூபாயை பகுதிக்குழு உறுப்பினர் பெரியசாமி வழங்கினார். இந்நிகழ்வுக்கு பகுதிச் செயலாளர் கே.மகேந்திரவர்மன் தலைமை தாங்கினார். பகுதிக் குழு உறுப்பினர் த.சுகுமார் வரவேற்றார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் சி.திருவேட்டை, ஆர்.முரளி, 98வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஏ.பிரியதர்ஷினி மற்றும் ராமஅழகேசன் (மதிமுக), வேலுமணி (விசிக), ஏழுமலை (காங்கிரஸ்), சுரேஷ்குமார் (தமாக) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஏ.பி.செல்வம் நன்றி கூறினார்.