districts

img

இளைஞர் மரணம்: குற்றவாளிகளை கைது செய்ய மறுக்கும் காவல்துறை

கள்ளக்குறிச்சி,டிச.14- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இளைஞர் அசாருதீன் மரணத்திற்கு காரணமாணவர்களை கைது செய்யா மல் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படும் காவல்துறையை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் எலவனாசூர்கோட்டை பேருந்து நிலையம் அருகில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த ஷேக் இர்ஃபான் என்கின்ற அசாருதீன் மரணத்திற்கு அலமேலு, சரண்யா, சபருன்னிசா, நடராஜன் ஆகி யோர்தான் காரணம் என்று கூறப்படு கிறது. எனவே, இவர்கள் மீது தற் கொலைக்கு தூண்டிய பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யாமல் காவல்துறையினர், குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். மேலும், எலவனாசூர்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்க வரும் பொதுமக்களை உதவி ஆய்வா ளர் மற்றும் சில காவலர்கள் மிரட்டு வதாகவும்  கூறப்படுகிறது. இந்த நிலையில், காவல்துறையை கண்டித்து  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வெள்ளிக்கிழமை (டிச.13)  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாவட்டச் செயலாளர் டி.எம்.ஜெய்சங்கர் உரையாற்றினர். ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கே.ஜெயமூர்த்தி, டி.பச்சையப்பன், ஆர்.செல்வராஜ், அஞ்சலை, என்.கோவிந்தன், ஆர்.ராஜகோபால், கே.செம்மலை, ஆர்.ரங்கதுரை, எஸ்.மாறன், எம்.முகமதுரபி, கிளை செய லாளர்கள் ஜே.இம்ரான், எம்.கண்ணன், பி.சிவசங்கரி, பி.முனியன், எம்.அர்ஜுனன், எம்.முகமதுரபீக் ஆகி யோர் கலந்து கொண்டனர்.