காவல்துறை, மாநகராட்சியின் தடையை மீறி, எழும்பூர் பகுதி புல்லா புரத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் கிளை பெயர்ப்பலகை திறப்பு மற்றும் கொடியேற்று விழா நடைபெற்றது. சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா கொடியேற்றி, மாதர் சங்க ஸ்தாபகர் தோழர் பாப்பாவின் 14ம் ஆண்டு நினைவு தின உரையாற்றினர். பகுதித்தலைவர் நாகராணி தலைமையில் மத்தியசென்னை மாவட்டத் தலைவர் ஆ.சாந்தி, செயலாளர் வெ.தனலட்சுமி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் பவானி, குப்பு, கிளைத்தலைவர் நாகலட்சுமி உள்ளிட்டோரும் பேசினர்.