கடலூர், ஆக.21-
கடலூர் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடை பெற்றது. இந்த ஏராளமான பொதுமக்கள் வந்து மனுக்களை அளித்தனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள எம்.புதுப்பாளையத்தை சேர்ந்த பெண்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் வந்தனர்.
எம்.புதுப்பாளையத்தில் அனுமதியின்றி செயல்பட்டு வரும் பிளாஸ்டிக் அரவை ஆலையால் சுற்றுச் சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. நிலத்தடி நீர்மட்டம் குறை கிறது. ஆழ்துளை கிணறு நீர் மாசுபடுகிறது என்று குற்றம் சாட்டினார்.
பொதுமக்கள் மனு கொடுக்க வந்த போது மாவட்ட ஆட்சியர் அங்கு இல்லை. அவர் மற்றொரு அரசு நிகழ்ச்சிக்கு சென்றி ருந்தார். இதனால் பொது மக்கள் அங்கேயே காத்தி ருந்தனர்.
இதுகுறித்து அப் பகுதியை சேர்ந்த பொது மக்கள் கூறியதாவது:- எம்.புதுப்பாளையத்தில் அனுமதியின்றி பிளாஸ்டிக் அரவை தொழிற்சாலை செயல்படுகிறது. இதை மூடக்கோரி பஞ்சாயத்து தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலர், மாசு கட்டுப்பாடு அதிகாரிகள், சுகாதார அதிகாரிகள் மற்றும் ஆட்சியர் அலு வலகத்தில் ஏற்கெனவே மனு அளித்துள்ளோம்.
இந்த ஆலையை மூட அதிகாரிகள் உத்தர விட்டனர். ஆனால் ஆலை நிர்வாகத்தினர் ஆலையை நடத்தி வருகின்றனர். எனவே, இந்த ஆலையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.