districts

பள்ளிக்கரணை ஏரி தண்ணீரில் பிளாஸ்டிக் துகள்கள் ஐஐடி பேராசிரியர் குழு ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு

சென்னை,பிப்.3- பள்ளிக்கரணையில் உள்ள சதுப்பு நிலம் 80 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ளது. இங்கு 176 வகையிலான பறவை  இனங்கள், 50 வகை மீன்கள், நத்தை இனங்கள் உள்ளிட்ட பல்வேறு வகை உயிரி னங்கள் உள்ளன. பள்ளிக்கரணை சதுப்பு  நிலம் ‘ராம்சர்’ தளங்களாக அங்கீகரிக்கப் பட்டு உள்ளன. பள்ளிக்கரணை சதுப்புநிலம்  ஆக்கிரமிப்புகளால் சுருங்கி வருகிறது.  மேலும் அப்பகுதியில் கொட்டப்படும் கழிவுகளால் தண்ணீரும் மாசு அடைந்து வருகிறது. இந்த நிலையில் சென்னை ஐ.ஐ.டி. குழுவினர் நடத்திய ஆய்வில் பள்ளிக்கரணை சதுப்பு நில தண்ணீரில் ஆபத்தை ஏற்படுத்தும் மைக்ரோ பிளாஸ்டிக் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஐ.ஐ.டி.யின் கட்டிடபொறியி யல் துறையின் சுற்றுச்சூழல் மற்றும் நீர்வள பொறியியல் பிரிவு பேராசிரியர் இந்து  மதிநம்பி மற்றும் ஆராய்ச்சியாளர் ஏஞ்சல் ஜெசிலீனா ஆகியோர் இந்த சதுப்பு நிலத்தில்  ஆய்வு செய்தனர்.  இதில் தண்ணீரில் மைக்ரோ பிளாஸ்டிக்  துகள்கள் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. மேற்பரப்பு நீரில் ஒவ்வொரு மீட்டர்  கனசதுர அளவில் சராசரியாக 1,758 மைக்ரோ பிளாஸ்டிக் இருப்பதாக தெரிவித்து  உள்ளனர். இதில் 50 விழுக்காட்டிற்கும் கீழ் 1 மி.மீட்டர் தடிமனுக்கு குறைவானவை. மேலும் துத்தநாகம், இரும்பு, நிக்கல் மற்றும்  டைட்டானியம் போன்ற கன உலோகங்க ளும் கண்டறியப்பட்டுள்ளது.