கடலூர், அக்.7- குறிஞ்சிப்பாடி ஒன்றியம், சிபிஎம் டி.பாளையம் கிராமத்தில் சாலை அமைக்க கோரி நாற்று நடும் போராட்டம் நடைபெற்றது. டி.பாளையம் ஆதிதிராவிடர் பகுதி மாரியம்மன் கோவில் தெருவில் சேரும் சகதியமாக உள்ள சாலையை கான்கிரீட் சாலை அமைக்க வேண்டும் என்று பலமுறை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. சாலை அமைக்காததால் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக தெருக்கள் அனைத்தும் கழனிபோல் போல் மாறி பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. இந்நிலையில் சிமெண்ட் சாலையை போட வலியுறுத்தி கட்சி சார்பில் டி.பாளையத்தில் நாற்று நடும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு கிளை செயலாளர் ஏ.கந்தசிவராமன் தலைமை தாங்கினார். சிபிஎம் ஒன்றிய செயலாளர் எம்.பி.தண்டபாணி, மற்றும் எம்.தங்கரத்தினம் உள்ளிட்ட ஊர் பொதுமக்கள் சகதியில் நாற்று நட்டு போராட்டம் நடத்தினர்.